Kanchipuram

News October 6, 2024

பரந்தூர் விவசாயிகளின் இரவு நேர போராட்டம்

image

திருபெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரந்தூர் கிராமத்தில் 2ஆவது பசுமை விமான நிலையம் அமைவதை கண்டித்து, நேற்றிரவு, 13 கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாய மக்கள், விவசாய நிலங்களை வழங்க மாட்டோம், நீர்நிலைகளை வழங்க மாட்டோம் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News October 5, 2024

குடும்பத்தாருடன் தொழிலாளர்கள் போராட்டம்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24ஆவது நாளாக எச்சூர் பகுதியில் இன்று 1000க்கும் மேற்பட்ட தங்களது குடும்பத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீபாவளிக்கு வழங்கக்கூடிய போனஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

News October 5, 2024

சாம்சங் விவகாரத்தில் தீர்வு காண முதலமைச்சர் அறிவுறுத்தல்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் ஆலை தொழிலாளர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து ஆராய்ந்து விரைந்து தீர்வு காண வேண்டும் என அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 5, 2024

விவசாய கிணற்றில் ஆண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை

image

எருமையூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்க தக்க ஆண் நபர் கிணற்றில் மூழ்கி அழுகிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அறிந்த சோமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, அழுகிய நிலையில் காயத்துடன் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை அனுப்பினர். பின்னர், அவர் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 5, 2024

கஞ்சா விற்ற உ.பியைச் சேர்ந்த 6 பேர் கைது

image

ஸ்ரீபெரும்புதுார், மாத்துாரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஒரகடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ஒரகடம் போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டபோது பள்ளிக்கு அருகே நின்று ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். விசாரணையில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த உ.பி.யைச் சேர்ந்த 20 – 34 வயதுடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

News October 5, 2024

இன்று நடைபெற இருந்த போராட்டம் ரத்து

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலைக்கு எதிராக, தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலையில், இன்று காஞ்சிபுரம் வணிகர் வீதியில் குடும்பத்துடன் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்தால் போராட்டம் ரத்து செய்து, எழுச்சூர் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

News October 5, 2024

12,925 வீடுகள் வெள்ளத்தில் சிக்க வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு இருப்பதாக, 72 இடங்களில் 12,925 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளை, துணை கலெக்டர்கள் நிலையிலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் மாண்டல், 2023ஆம் ஆண்டில் மிக்ஜாம் புயலால் காஞ்சிபுரம் மிகவும் பாதிக்கப்பட்டதால் அந்த நிலை வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News October 5, 2024

கணவன் மீது வெந்நீரை ஊற்றியதில் படுகாயம் அடைந்த கணவன் சிகிச்சை பலனின்றி பலி

image

சோமங்கலம் அருகே புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா (28). இவரது மனைவி முத்துசெல்வி (26). தேவா கட்டிடம் கட்டும் வேலை செய்து வந்தார். தேவாவுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இதே போல் கடந்த 30ம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த மனைவி கொதிக்கும் தண்ணீரை எடுத்து கணவர் மீது கொட்டினார் இதில் படுகாயம் அடைந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

News October 5, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்.5) காலை 9 மணி முதல் 3 வரை காஞ்சிபுரத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரம், பல்லவர்மேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகர், ஏனாத்துர், வையாவூர், இந்திரா நகர் மற்றும் வேளியூர் துணை மின் நிலையங்களைச் சேர்ந்த கிராமங்களில் மின்தடை ஏற்படும். பொதுமக்கள் முன்னதாகவே மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 5, 2024

தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட முடிவு

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 20 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 5ஆம் தேதி அன்று ஊழியர்கள் குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட வணிகர் வீதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!