Kanchipuram

News October 12, 2024

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாளுக்கு தங்க கிரீடம்

image

காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோ‌யி‌லி‌ல், இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயிலில் உ‌ள்ள ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாளுக்கு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றிணைந்து தங்க கிரீடம் வழங்கினர். ரூ.7 லட்சம் மதிப்புள்ள சுமார் 6.400 கிலோ எடை கொண்ட தங்க கிரீடத்தை கோவில் அறங்காவலர் குழுவினரிடம் வழங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News October 12, 2024

தொழிலாளர் போராட்டம்: சர்வதேச அமைப்புக்கு CITU கடிதம்

image

சாம்சங் இந்திய தொழிலாளர் சங்கத்தைப் பதிவு செய்ய, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை பதிவாளர் மறுப்பதாகவும், 1926 தொழிற்சங்கம் உரிமைப்படி போராடி வருவதாகவும் ன சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம், டெல்லியில் இருக்கும் சி.ஐ.டி.யு மத்திய தலைமை அலுவலகம் வழியாக புகார் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் கடந்த ஜூன் 26ஆம் தேதி கடிதம் கொடுத்த நிலையில், 85 நாட்களுக்கு மேலாகியும் பதிவு செய்யவில்லை.

News October 12, 2024

மறைந்த திமுக நிர்வாகிக்கு பலர் இரங்கல்

image

திராவிட முன்னேற்ற கழகம் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சிகாமணியின் மகனும் காஞ்சிபுரம் நகர இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளரும், காஞ்சிபுரம் மாநகர மாவட்ட பிரதிநிதியுமான எஸ்.ரவிக்குமார் இன்று (12-10-24) அதிகாலை 4 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தினருக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 12, 2024

பாலுக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

image

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பால் விநியோகம் பிரதான தொழிலாக உள்ளது. அட்சன், ஜெர்சி நிறுவனங்களுக்கு பாலை விநியோகம் செய்து வருகின்றனர். கனமழை காலங்களில் புல்வெளிகளில் மழைநீர் தேங்கி மாடுகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே தீவன விலைவாசிகள் அதிகம் உள்ள நிலையில் பாலுக்கு வழங்கப்படும் விலையை கூடுதலாக தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 11, 2024

காஞ்சிபுரத்திற்கு வரும் 15ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்!

image

காஞ்சிபுரத்தில் வரும் 15ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால், வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேலும், 15ஆம் தேதி காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 11, 2024

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் இன்று இல்லை

image

சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், கடந்த 30 நாட்ககளுக்கும் மேலாக தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஆயுத பூஜை விடுமுறை நாள் என்பதால், இன்று ஒரு நாள் போராட்டம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.

News October 11, 2024

குழந்தை திருமணத்தை ஆதரித்தால் 2 ஆண்டு சிறை

image

குழந்தைகள் திருமண சட்டத்தின்படி, பெண்களுக்கு 18 வயதுக்குள் மற்றும் ஆண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் நடத்தக் கூடாது. சட்டத்தை மீறி, திருமணம் நடத்துவது அல்லது ஆதரிப்பது சட்ட்டபடி குற்றம். அப்படி திருமணம் நடைபெறுவது கண்டறிப்பட்டால், அவர்களுக்கு குழந்தை திருமண சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News October 11, 2024

91 சிறு ஏரிகளின் பட்டியல் தயாரித்து சீரமைக்க முடிவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், தலா 100 ஏக்கர் பரப்பளவில் 380 ஏரிகள் உள்ளன. சீரமைப்புக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 91 சிறு ஏரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஏரிகள் வேறு ஏதேனும் திட்டத்தில் சீரமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என அத்துறையினர் கூறினர்.

News October 11, 2024

தொழிலாளர்கள் பிரச்னையில் கவனம் தேவை: அர்ஜுன் சம்பத்

image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று வருகை தந்தார். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் உள்பட நிர்வாகிகள் பலர் அவருடன் வந்திருந்தனர். தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவா், “சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையை திமுக அரசு கவனமாக கையாவில்லையெனில் சாம்சங் தொழிற்சாலை வேறு மாநிலத்துக்கு சென்று விடலாம்” என்றாா்.

News October 11, 2024

ரத்தன் டாடா படத்தை வரைந்த காஞ்சிபுரம் ஓவியர்

image

பிரபல தொழில் அதிபரும், டாடா நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா, நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ஓவியர் சங்கர், ரத்தினம் டாட்டா புகைப்படத்தை கருப்பு மையால் தத்துரூபமாக வரைந்துள்ளார். அவரது இந்தச் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!