Kanchipuram

News November 3, 2024

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – கல்லூரி மாணவர் பலி

image

கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த டெல்லி பாபு (19), சேலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவர் தனது நண்பன் ஹரியின் பைக்கை எடுத்துக் கொண்டு எருமையூரில் நேற்று மாலை போட்டோசூட் எடுக்கச் சென்றார். அப்போது, பூந்தமல்லியைச் சேர்ந்த தேஜாஸ் (18) என்பவர் வந்த பைக், பாபு பைக் மீது மோதியது. இதில், கீழே விழுந்த பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 3, 2024

துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து

image

ராணிப்பேட்டை துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, உறவினர்கள் காஞ்சிபுரம் மேல்ஓட்டிவாக்கம்,கூத்திரம் மேடு பகுதியில் இருந்து மினி லாரி மூலம் சென்றுள்ளனர். அப்போது தாமல் அருகே மினி லாரியின் டயர் வெடித்ததால் லாரி கவிழ்ந்தது. இந்த மினி லாரியில் பயணம் செய்த 28 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மினி லாரியில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 3, 2024

கேரளாவில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ

image

வயநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வுமான செல்வப்பெருந்தகை நேற்று (02.11.2024) வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 2, 2024

காமாட்சி அம்மன் தங்க தேர் உற்சவம்

image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இரவு 8:15 மணிக்கு தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காமாட்சி அம்மன் காட்சி அளித்தார். பக்தர்கள் தங்கதேரை இழுத்து பக்தி பரவசமாக தரிசித்தனர். உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். வானவேடிக்கை வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

News November 2, 2024

மழைக்காலத்தில் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

image

வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.

News November 2, 2024

கோயில் உட்பிரகாரத்தில் சுற்றிவர அனுமதி இல்லை

image

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோலியில், திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால், நடப்பு ஆண்டு கந்தசஷ்டி சூராசம்ஹார விழா மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறாது. இருப்பினும், கந்தசஷ்டி விழாவையொட்டி வரும் 7ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுவதால், பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றிவர அனுமதி இல்லை என காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

News November 2, 2024

17,000 கிலோ பட்டாசு கழிவுகள் அகற்றம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் நேற்று முன்தினம் தீபாவளியன்று பட்டாசு கழிவுகள் ஏராளமாக சேர்ந்தன. இவற்றை, தீபாவளியன்று காலை முதல் நேற்று மாலை வரை என இரு நாட்கள் தொடர்ந்து அகற்றப்பட்டன. அவ்வாறு, தீபாவளி பண்டிகை அன்று மட்டும் 6,000 கிலோ பட்டாசு கழிவுகளும், நேற்று 11,000 கிலோ என மொத்தம் 17,000 கிலோ பட்டாசு கழிவுகள் நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் தனியாக குவிக்கப்பட்டுள்ளன.

News November 2, 2024

தீபாவளியன்று 6 தீ விபத்து: உயிரிழப்பு இல்லை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று முந்தினம் தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க, தீயணைப்பு துறையினர் தயாராக இருந்தனர். வாலாஜாபாத்தில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலும், கீழ்கதிர்பூர் கிராமத்தில் வைக்கோல் போரும் உள்ளிட்ட 6 இடங்களில் தீ விபத்துகள் நடந்ததாகவும், அதில் யாருக்கும் காயம் மற்றும் உயிரிழப்பு போன்றவை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

பாலசுப்பிரமணியசுவாமி கோயில் பந்தக்கால் நடும் விழா

image

காஞ்சிபுரம் அடுத்த இளையனார் வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று காலை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருக்கோயில் அறங்காவலர் குழு சார்பாக குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

News November 1, 2024

காஞ்சிபுரம் டாஸ்மாக்கில் ரூ.3 கோடிக்கு மேல் வசூல்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 6 டாஸ்மாக் கடைகளில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரே நாளில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மது பிரியர்கள், டாஸ்மாக் கடைகளில், அதிகமான அளவில் மது வாங்கிச் சென்றனர். மேலும், கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு வசூல் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!