Kanchipuram

News October 15, 2024

அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழா ஒத்திவைப்பு

image

வரும் அக்.17ஆம் தேதி அன்று அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழாவில், காஞ்சிபுரம் மாநகருக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வருவதாக இருந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகியவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தேதி குறிப்பிடாமல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.

News October 15, 2024

பயிர் இழப்பைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இதன் விளைவாக, வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் மற்றும் புயல் போன்ற மோசமான வானிலை நிகழ்வுகளை சமாளிக்க, கடந்தாண்டு அனுபவத்தின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் அதிக கவனம் செலுத்தி தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 15, 2024

காஞ்சிபுரத்தில் உள்ள ஏரிகளின் நீர் நிலவரம்

image

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில், 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதிலுள்ள , 105 ஏரிகள் 75% – 100% , 188 ஏரிகள் 50% – 75%, 275 ஏரிகள் 25% – 50%, 315 ஏரிகள் 25% கீழ் நிறைந்திருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ள்ளது.

News October 15, 2024

முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த ஓ.பி.எஸ்.

image

காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு வெளியானத் குறித்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை நிலையம் அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மக்களை வெள்ள அபாயத்திலிருந்து காக்க வேண்டுமென்று வலியுறுத்திகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: காஞ்சிபுரம் – 15.60 மி.மீ., ஸ்ரீபெரும்புதூர் – 16.20 மி.மீ., உத்திரமேரூர் – 34 மி.மீ., வாலாஜாபாத் – 25 மி.மீ., குன்றத்தூர் – 16.2 மி.மீ., செம்பரம்பாக்கம் – 21 மி.மீ., என காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 128 மில்லி மீட்டர் மழை பெய்த பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 15, 2024

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் ,தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 1000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். இதில், பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12 மற்றும் 10ஆம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

19 பேர் தற்காலிகமாக பட்டாசு கடை நடத்த விண்ணப்பம்

image

காஞ்சிபுரத்தில், 55 கடைகள் நிரந்தர பட்டாசு உரிமம் பெற்று ஏற்கனவே இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகைக்காக தற்காலிகமாக சிலர் அனுமதி வாங்குவது வழக்கம். அந்த வகையில், 19 பேர் தற்காலிகமாக பட்டாசு கடை நடத்த வேண்டி, ‘ஆன்லைனில்’ விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்கள், பாதுகாப்பு, விதிமுறைகள் பின்பற்றுகின்றனரா என, பல்வேறு துறை அதிகாரிகள் சான்றளித்த பின் அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 15, 2024

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 260 கன அடி நீர் வந்து

image

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 13.23 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, தண்ணீரின் அளவு 1.223 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 250 கனஅடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து ஆனது 260 கன அடியாக உள்ளது.

News October 15, 2024

காஞ்சிபுரத்தில் நேற்றிரவு முதல் மழை

image

காஞ்சிபுரம் மற்றும் ஆதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட ஒளிமுகமது பேட்டை, பெரியார் நகர், செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளைகேட், நத்தப்பேட்டை, களக்காட்டூர், வாலாஜாபாத், தாமல், பாலுசெட்டி சத்திரம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில்?

News October 15, 2024

கிராமங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது

image

தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. உத்திரமேரூர், மருதம், திருப்புலிவனம் போன்ற பல கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது. சாலையிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக கடைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

error: Content is protected !!