Kanchipuram

News October 18, 2024

சாம்சங் தொழிற்சாலை சங்கம் வழக்கு

image

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்வதை மறுத்து வந்த தமிழக தொழிலாளர் துறைக்கு எதிராக, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் சிஐடியு உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு, நேற்று 34ஆவது வழக்காக அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு வழக்குகள் தொடர்ந்த நடைபெற்ற நிலையில், சி.ஐ.டி.யூ. வழக்கு வரும் 22ஆம் தேதி பிற்பகலில் எடுத்துக் கொள்வதாக நமது வழக்கறிஞர்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

News October 18, 2024

வெள்ள கண்காணிப்பு அறை திறப்பு: கலெக்டர் தகவல்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேற்று வெளியிட்ட செய்தியில், “காஞ்சிபுரத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக வெள்ளம் மற்றும் புயல் போன்ற மோசமான வானிலை நிகழ்வுகளை சமாளிக்க மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலும், வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்திருப்பதுடன் வெள்ள கண்காணிப்பு அறையும் திறக்கப்பட்டுள்ளது” என்றார்.

News October 18, 2024

தேர்வர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி

image

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு, இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை (அக்.19, 20 தவிர) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் அரசு சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 18, 2024

காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (அக்.18) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 18, 2024

500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில், தீப்பாஞ்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான இக்கோயில் வளாகத்தில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் மு.அன்பழகன், ந.அப்பாதுரை இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது சுமார் 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் மண்ணில் புதையுண்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து, இதன் காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News October 18, 2024

மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மழை குறைந்த நிலையில் இன்று (அக்.18) காலை 6.50 மணி அளவில் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் குடை எடுத்துச் சொல்லுங்க.

News October 18, 2024

மிளகு சாகுபடிகளில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

image

காஞ்சி மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கரும்பு சாகுபடியில் நல்ல விலை இல்லாத காரணத்தினாலும், இடுபொருட்கள் விலை அதிகமாக உள்ளதாலும், தென்னையிலும், வேளாண் சமவெளிப் காடுகளில் மிளகு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மிளகு சாகுபடி செய்ய காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நிலுவையில் உள்ளதால், மிளகு சாகுபடிக்கு காலதாமதமின்றி செடிகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

News October 18, 2024

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்கத்தேரில் பவனி

image

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், ஐப்பசி மாதப்பிறப்பு மற்றும் பௌர்ணமியையொட்டி காமாட்சி அம்மன், சரஸ்வதி தேவியருடன் தங்கத்தேரில் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தங்கத்தேர் ஆலயத்தை வலம் வந்த பின்னர், கோயில் நான்கு கால் மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

News October 17, 2024

செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து குறைவு

image

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 85 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி ஆகும். ஆனால், தற்போது நீர் இருப்பு 13.79 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, தண்ணீரின் அளவு 1.317 டி.எம்.சி. தண்ணீராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 17, 2024

ஹூண்டாய் தொழிற்சாலை நவீனமயமாகிறது

image

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது, 5.40 லட்சம் சதுர அடியில் ஆலை செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் தொழிற்சாலையை நவீன மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 19,706 பேர் பணியாற்றி வரும் நிலையில், கூடுதலாக 155 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!