India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான இலவச திருமணங்கள் இன்று நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற குமரக்கோட்டம் திருக்கோயிலில் 3 திருமணங்களும் என மொத்தம் 11 திருமணங்கள் காலை 6 மணியிலிருந்து 7.30 நடைபெறுகிறது.
வரதராஜபுரத்தைச் சேர்ந்த சுதர்சனா(31) வீட்டில் மணிமங்கலத்தைச் சேர்ந்த ஜோதிமணி (50) வீட்டு வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த 18 சவரனை நகை திருடி கொண்டு ஜோதிமணி தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மணிமங்கலத்தில் இருந்த அவரை சுதர்சனா பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஜோதிமணியிடமிருந்து 18 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுணைபெருகல் கிராமத்திலிருந்து, ஆரியபெரும்பாக்கம், சமத்துவபுரம், துலங்கும் தண்டலம், திம்மசமுத்திரம் வழியாக காஞ்சிபுரம் அரசு பேருந்து ‘T10’ பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்து, தினசரி 3 நடைகள் இயங்கப்பட்டன. கொரோனாவிற்குப் பின் இந்தச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடங்குமாறு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உங்கள் கருத்து?
மாவட்ட அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், சிகிச்சை அளிக்கும் முறைகள், நோயாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் 23 வகையான சிகிச்சை முறைகள், மொத்தம் 765 படுக்கைகள், 70 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, சுகாதாரத் துறை அளிக்கும் தர வரிசை பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 10 மாதங்களாகவே முதல் இடத்தில் தொடர்கிறது.
ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளாா். பகுதி அல்லது முழு நேர ஆராய்ச்சிப் படிப்பு படிப்பவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலுபவராக இருக்க வேண்டும். சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
2024-25ஆம் கல்வியாண்டின் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டல் (National Scholarship Portal) மூலம் பெறலாம். விண்ணபிக்க கடைசி நாள் வரும் 31ஆம் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க கடைசி நாள் நவ.15ஆம் தேதி ஆகும். 9, 11ஆம் வகுப்பு புதிய விண்ணப்பதாரர்கள் 60% மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். <
காஞ்சிபுரம் தீபிகா மருத்துவமனையில், நாளை (அக்.20) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களுக்கான இலவச பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. மூச்சுத்திணறல், நீண்ட கால இருமல், சளி, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான சிகிச்சை ஆலோசனைகளை மூத்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் தீபிகா வழங்க உள்ளார். ஷேர் பண்ணுங்க
செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது நீர் இருப்பு 13.97 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, தண்ணீரின் அளவு 1.348 டி.எம்.சி.யாக உள்ளது. தற்போது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
காஞ்சிபுரம் செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை, போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை, அனைத்து ரோட்டரி சங்கங்கள், இந்திய பல் மருத்துவ சங்கம் உள்ளிட்டவை இணைந்து, மாபெரும் இலவச இருதயம், பல், கண் பரிசோதனை மருத்துவ முகாம் நாளை (அக்.20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்பட உள்ளது. எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.