India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டுகோட்டை, பொள்ளாச்சி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு தேங்காய்கள் வரவழைக்கப்படுகிறது. இன்று (அக்.22) தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் வரத்து குறைவால் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய தேங்காய் ரூ.20க்கும், ரூ.20க்கு விற்கப்பட்ட மீடியம் சைஸ் தேங்காய் ரூ.30க்கும், ரூ.30க்கு விற்கப்பட்ட தேங்காய் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை வெற்றிகரமாக்கிய சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் இ.முத்துக்குமார், பொதுச்செயலாளர் எல்லன் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட 24ஆவது மாநாட்டில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் நேற்று ‘காரல் மார்க்ஸ்’ சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
குன்றத்தூர், பரணிபுத்தூர் அருகே உள்ள மாங்காடு சாலையில் உள்ள சக்தி பேலஸில், புதிய மின்னணு குடும்ப அட்டை, கல்விக் கடன் மேளா மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு டிப்பர் லாரிகள் வழங்கும் விழா இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், அண்மையில் பாரீஸில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற 100 பேருக்கு அரசுப் பணி தமிழக அரசு சார்பில் மேற்கொண்டுள்ளது. துளசிமதி முருகேசனுக்கு தற்போதைய தகவலின்படி துணை ஆட்சியர் நிலையிலான பணியை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்ட அமமுக நிறுவனர் டிடிவி தினகரன், “இரட்டை இலை இபிஎஸ் இடம் சிக்கிக்கொண்டு பலவீனமாகி வருகிறது. சின்னம் அவரிடம் இருப்பதால் மட்டுமே அனைத்து நிர்வாகிகளும் அவருடன் உள்ளனர். அதிகார போதை உள்ள அவரால் ஒருபோதும் இணைப்புக்கு சாத்தியம் இல்லை. திமுகவின் B டீமாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார். 2026 தேர்தலில் அதிமுகவிற்கு மூடு விழா செய்துவிடுவார் இபிஎஸ் என தெரிவித்தார்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி வரை அரசு பேருந்து பயணத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் நேற்று துவங்கி வைத்தார். இந்த பேருந்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தனி வழியாக திருப்பதி செல்லும். இந்த நிகழ்வின் போது போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி 23.10.2024 தேதி உத்திரமேரூர் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள் உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6.00 வரை மணிக்கு மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கலாம் என தெரவித்துள்ளார்.
2024 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, முதலமைச்சர் மாநில விருதுகளை வழங்க உள்ளார். 10 வகையான விருதுகளுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விருதுகளை பெற விண்ணப்பதாரர்கள் 25.10.2024க்குள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மீகப் பயணமாக வாரணவாசி சென்றுள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சிக்காக பங்கேற்ற்போது, அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் மடாதிபதியுடன் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள், பிரதமருக்கு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரசாதங்களை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.