Kanchipuram

News October 23, 2024

இறுதிப் போட்டிக்கு 3 பேர் தேர்வு

image

கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, இளம் பேச்சாளர்களை திமுக இளைஞர் அணி சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடத்தி வருகிறது. கடந்த ஆக.17ஆம் தேதி முதல் பேச்சுப்போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் வருகிறது. இந்நிலையில் கடந்த அக்.13 அன்று நடைபெற்ற போட்டியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இறுதிப் போட்டிக்கு ச.பேரரசன், ச.யாசர்அரபாத், தா.ஜெயபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News October 23, 2024

காஞ்சிபுரம் வீராங்கனைக்கு பாராட்டு விழா

image

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியில் வசிக்கும் நீனா (21), கம்போடியா நாட்டில் நடந்த ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்டார். அபாரமாக விளையாடி, 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் வென்றார். இவருக்கு நேற்று காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா பூங்கா வாக்கிங் குழு சார்பில், பூங்கா வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், வாக்கிங் குழுவினர் வீராங்கனை நீனாவை கௌரவித்து பரிசு வழங்கி பாராட்டினர்.

News October 23, 2024

முழு கொள்ளளவை எட்டாததால் நீர் இருப்பு குறைவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 381 ஏரிகள் உள்ளன. இதில், ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டாத நிலையில் உள்ளது. மொத்த ஏரிகளில் 11 ஏரிகள் 75 சதவீதமும், 93 ஏரிகள் 50 சதவீதமும், 275 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பை கொண்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ளதால், நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News October 23, 2024

சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

image

சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து, ஈட்டுறுதி, உதவித்தொகை உள்ளிட்ட 8 வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம், நாளை (அக்.24) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், உறுப்பினராக சேர்ந்து பயனடையலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 23, 2024

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தொழில் பயிற்சிகள்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடங்கு மேலாண்மை, கிடங்கு பிக்கர் & பேக்கர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. கிடங்கு மேலாண்மை – டிப்ளமோ/பட்டப்படிப்பு, பிக்கர்/பேக்கர் – 10, 12ஆம் வகுப்பு & ITI படித்திருக்க வேண்டும். www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

image

வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.4 கோடிக்கு சொத்து சேர்த்த வழக்கில், படப்பை வடிநிலக்கோட்ட நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் அவரது மனைவியும், திமுக பெண் மாவட்ட கவுன்சிலருமான ராஜலட்சுமி, தாய் தமிழரசி, சகோதரி ராஜேஸ்வரி ஆகிய 4 பேர் மீது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அண்மையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 23, 2024

வரும் 27ஆம் தேதி மாபெரும் ரத்ததான முகாம்

image

விழுதுகள் அமைப்பு மற்றும் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் இயங்கும் ‘முத்து இயன்முறை’ மருத்துவமனையில் வரும் 27ஆம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடத்த உள்ளனர். இதில், ரத்த தானம் அளித்த  பிற உயிர்களை காக்க வழி வகுக்கலாம் என விழுதுகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ரத்த தானம் செலுத்துவது மிகவும் நல்லது. ஷேர் பண்ணுங்க

News October 23, 2024

கிராமசபை கூட்டத்தை வேறு தேதியில் நடத்த வேண்டுகோள்

image

தீபாவளி பண்டிகை அக் 31ஆம் தேதி கொண்டாடப்படுவதால், மறுநாள் நவ 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளித்தும், கிராமசபை கூட்டங்களை நடத்தவும் அறிவித்துள்ளது. விடுமுறை தினமான அன்றைய தினம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளதால், காஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராமசபை கூட்டத்தை, வேறு தேதியில் நடத்த வேண்டுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 23, 2024

போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு

image

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வாரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். ஊழியர்கள் பணியில் ஈடுபடாததால், 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சாம்சங் தொடர்பான வழக்கின் விரிவான விசாரணை வரும் நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

காஞ்சிபுரம் இன்று இனிதாக

image

நித்ய பூஜை சிறப்பு வழிபாடு:
*ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் காலை 7:30 மணிக்கு. *இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கு. *வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கு. சத்யநாதசுவாமி பிரம்மராம்பிகை கோவிலில் காலை 7 மணிக்கு. வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கு. விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணிக்கு. சோதிபுரீஸ்வரர் கோவலில் காலை 7 மணிக்கு.

error: Content is protected !!