India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லட்சதீவு அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியை நோக்கி வங்கக்கடல் காற்றும் பயணிப்பதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்.4) தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகாண போட்டிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து வீரர் வீராங்கனைகள் புறப்பட்டனர். அவர்களை கள்ளக்குறிச்சி
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வாழ்த்தி பேருந்தின் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது பேருந்தில் அமர்ந்தபடி இருந்த வீரர்களை பார்த்து கொடியை அசைத்து வாகனத்தை அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக பணிபுரிந்த பவானி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருந்தங்குடி ஊராட்சியில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணி நடைபெற்று வரும் இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நீர்வளத் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலங்களில் உள்ளது போன்று இணைய வழி வேளாண்மை பணியை செயல்படுத்த வேண்டும். தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வேண்டும் வருவாய் கிராமங்களை பிரிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 5 ஆயிரம் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 600க்கும் மேற்பட்ட ஒட்டுக்குடல், பித்தப்பை குடல், இறக்கம் போன்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் முன் துளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். குறிப்பாக லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர் என தலைமை மருத்துவர் நேரு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக ‘மது போதைப் பொருள் ஒழிப்பு’ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபான கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை மாநில அரசு அறிவிக்க வேண்டும், மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உளுந்தூர்பேட்டையில் இன்று விசிக சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக யாரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி திருவள்ளூர் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக ஆரணி நகராட்சி ஆணையர் பணிபுரிந்து வந்த சரவணன் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் பணியினை துரிதப்படுத்தும் வகையில் பொறுப்பாளர்கள் தமிழக முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பாளராக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சங்கரதாஸ் நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.