Kallakurichi

News February 20, 2026

கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே <<>>கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 20, 2026

கள்ளக்குறிச்சி: 45 செயலாளர்கள் பணியிடை மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பணியாற்றி வந்த 45 ஊராட்சி செயலாளர்கள், அதிரடியாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியான புகார்கள் பணி சுமை மறுசீரமைப்பு உள்ளாட்சி நிர்வாக மேம்பாடு போன்ற நிர்வாக காரணங்களுக்காக, இந்த பணியிடை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 20, 2026

கள்ளக்குறிச்சி: தாய் வீட்டிற்கு சென்று வீடு திருமியதும் அதிர்ச்சி!

image

திருக்கோவிலூர், அத்தண்டமருதூரை சேர்ந்த சக்திவேல் மனைவி வனிதா (45), வீட்டை பூட்டிவிட்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியில் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News February 20, 2026

கள்ளக்குறிச்சி: போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது

image

திருக்கோவிலூர் , காட்டுப்பையூர் சேர்ந்த தண்டபாணி மகன் பரத்ராஜ் (வயது 21). இவர் கடந்தாண்டு மார்ச் மாதம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து, வாழ்ந்து வந்த நிலையில் சிறுமி 8 மாத கர்ப்பமானாள். இதையடுத்து பரிசோதனைக்கு சென்றபோது, சிறு மிக்கு 17 வயது ஆவது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் பரத்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 19, 2026

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு முன்னாள் படை வீரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து, தொடர்ந்து முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News February 19, 2026

கள்ளக்குறிச்சி: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <>க்ளிக் <<>>செய்து பதிவு செய்த மொபைல் எண் Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து முகவரி விவரம் சரிபார்த்து தேவையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க வீடு தேடி புது ரேஷன்கார்டு வந்துவிடும்.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 19, 2026

கள்ளக்குறிச்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்,
1) மக்களவைத் தொகுதி – 1,
2) சட்டமன்றத் தொகுதிகள் – 4,
3) நகராட்சிகள் – 3,
4) வருவாய் கோட்டங்கள் – 2,
5) வட்டங்கள் – 7,
6) பேரூராட்சிகள் – 5,
7) ஊராட்சி ஒன்றியங்கள் – 9,
8) ஊராட்சிகள் – 412,
9) வருவாய் கிராமங்கள் – 562 உள்ளன.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பாண்ணுங்க!

News February 19, 2026

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் தனியார் பள்ளிக் கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 முன்னிட்டு வாக்குச்சாவடி மைய மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (19.02.2026) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்டப் பலர் உள்ளனர்.

News February 19, 2026

கள்ளக்குறிச்சி: மருந்து வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

error: Content is protected !!