India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுகளின்படி உற்பத்தி மேம்படுத்துவதாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்குவதற்கு ஜவுளி துறையில் புதிய தொழில்நுட்பம் நுணுக்கங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகம் துணிநூல் துறை சங்ககிரி மெயின் ரோடு குகை சேலம் -636006 மின்னஞ்சல் முகவரியிலும் 0427-2913006 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு விதமான தொழில்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட பயிற்சிகளை பெற அக்டோபர் 25ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் மாவட்ட திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் அவர்களால் விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சிறு அரசு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட காலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக துணை முதல்வருக்கு மணலூர்பேட்டை, மணம்பூண்டி கூட்டுரோடு, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி டோல்கேட், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட ஐந்து இடங்களில் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அமைப்பாளர் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு, கணினி திறன்கள் முடித்திருக்க வேண்டும். அவர்கள் வரும் 21 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை (அக்.19) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட்ட உள்ளன. திருக்கோவிலூர், சேந்தநாடு, வானாபுரம், எடுத்தவாய் நத்தம், அக்ரபாளையம், ஒடுவான்குப்பம், மேலந்தல், பாளையம், கள்ளக்குறிச்சி, எம்மாப்பர், அக்ரபாளையம், நீதிமன்றம், தண்டலை, கல்லாநத்தம், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படும்
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்ச்சி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 19ஆம் தேதி மதியம் 3 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், முதன்முறையாக துணை முதல்வராக பதவியேற்ற பின் கள்ளக்குறிச்சி வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளிக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அக்.19ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி டோல்கேட் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் உதவி சூரியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.