India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் விழாக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் நகரப் பகுதிக்குள் வர அனுமதியில்லை. வாகனங்கள் விளாந்தாங்கல் ரோடு, கரியப்பா நகர் மற்றும் ஏமப்பேர் வழியாக செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் பேரிடர் தொடர்பான அவசர தேவைக்கு 101, 112, 7305096222, 04151-222101 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 303 மனுக்களும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 18 மனுக்களும் என மொத்தமாக 321 மனுக்கள் பெறப்பட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள முகநூல் அறிக்கையில் இன்று அக்டோபர் 14ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், இன்று காலை10 மணி வரை தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என ஆட்சியர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (13.10.2024) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
பேரிடர் காலத்தில் பொதுமக்கள் TN-AIert ஆஃப் கைப்பேசி பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் வெப்பநிலை மழை போன்ற வானிலை முன்னறிவிப்புகள் தமிழில் வழங்குகிறது இதில் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள் தினசரி மழை அளவுகள் வெள்ள பாதிப்பு போன்ற தகவல்கள் அறிந்து கொள்ளலாம் ஆகையால் இந்த ஆப் ப்ளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான கை மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்புராயலு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு கை மல்யுத்த சங்கத்தின் மாநில செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.