India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாளை (21-10-2024) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
கல்வராயன் மலையில் சாலை வசதிகள் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தான சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் எம் எஸ் சுப்பிரமணியன் வி.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மலை கிராமங்களில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை வசதிகள் உள்ளதா இல்லையா என வரும் 22 தேதி கள்ளக்குறிச்சி கலெக்டர் நேரில் ஆஜராகி கூறவும் வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்இன்று மாலை 3:30 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது, இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கள்ளக்குறிச்சிக்கு வருகை தருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுகளின்படி உற்பத்தி மேம்படுத்துவதாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்குவதற்கு ஜவுளி துறையில் புதிய தொழில்நுட்பம் நுணுக்கங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகம் துணிநூல் துறை சங்ககிரி மெயின் ரோடு குகை சேலம் -636006 மின்னஞ்சல் முகவரியிலும் 0427-2913006 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு விதமான தொழில்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட பயிற்சிகளை பெற அக்டோபர் 25ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் மாவட்ட திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் அவர்களால் விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சிறு அரசு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து துறைவாரியாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட காலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக துணை முதல்வருக்கு மணலூர்பேட்டை, மணம்பூண்டி கூட்டுரோடு, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி டோல்கேட், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட ஐந்து இடங்களில் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.