Kallakurichi

News October 30, 2024

கள்ளக்குறிச்சி:எதிர்க்கட்சி தலைவரை விமர்சித்த அமைச்சர்

image

வீரசோழபுரம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பழைய பல்லவியை பாடி வருகிறார். திமுக தனது கொள்கையில் இருந்து என்றும் மாறாது. ஒன்றிய அரசிடமிருந்து நிதி கேட்டு வாங்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் பங்கைதான் நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.இதற்காக தமிழக முதல்வர் பிரதமரை பார்ப்பது தவறா? என்று கேள்வியெழுப்பினார்.

News October 30, 2024

ரேஷன் கடைகளில் வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ளலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 70,000 மேற்பட்டோர் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு விலையில்லா வேட்டி சேலை சம்பந்தப்பட்ட ரேஷன் கடை மூலம் இன்று வழங்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் பெறுவோர் ரேஷன் கடைகளில் நேரடியாக வேட்டி சேலைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 30, 2024

 கள்ளக்குறிச்சி  மாவட்ட  ஆட்சியர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், அதற்கு தேவையான மூலப்பொருட்கள் பதிக்க வைத்தல் அதுமட்டுமின்றி போதை பொருட்கள், குட்கா, கஞ்சா போன்ற பொருள்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

News October 29, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (29.10.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News October 29, 2024

கள்ளக்குறிச்சியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

image

குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையம்,மணிக்கூண்டு பகுதி 2 இடங்களில் உயர்கோபுர கண்காணிப்பு கூண்டுகள் அமைத்துள்ளனர்.திருக்கோவிலுாரில் 3,சங்கராபுரத்தில் 1,மணலுார் பேட்டையில் 1,உளுந்துார்பேட்டையில் 1,சின்னசேலத்தில் 1,தியாகதுருகத்தில் 1 என மொத்தம் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது

News October 29, 2024

போக்குவரத்து விதிகளை மீறியதாக 28 பேர் மீது வழக்கு பதிவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அமானுல்லா மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, வாகனத்தில் 3 பேர் அமர்ந்து சென்றது, ஹெல்மெட் அணியாமல் ஓட்டியது, காரில் சீட்பெல்ட் அணியாமல் ஓட்டியது என 28 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

News October 29, 2024

காணொளி மூலம் திறந்து வைக்கிறார் முதல்வர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாவந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கல்லூரி வளாகத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட உள்ளார்.

News October 29, 2024

உயர்கோபுர கண்காணிப்பு கூண்டு அமைத்து கண்காணிப்பு

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும் என்பதால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், மணிக்கூண்டு பகுதி என 2 இடங்களில் உயர்கோபுர கண்காணிப்பு கூண்டுகள் அமைத்துள்ளனர். அதேபோல், திருக்கோவிலுாரில் 3, சங்கராபுரத்தில் 1, மணலுார் பேட்டையில் 1, உளுந்துர்பேட்டையில் 1, சின்னசேலத்தில் 1, தியாகதுருகத்தில் 1 என மொத்தம் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News October 29, 2024

ஆவின் நிறுவனத்தில் வேலை- ஆட்சியர்

image

சின்னசேலம் ஆவின் நிறுவனத்தில் நவம்பர் 5-ந் தேதி நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சின்னசேலத்தில் செயல்பட்டு வரும்  பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால், உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்யவும், புதிய முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News October 28, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (28.10.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!