Kallakurichi

News November 2, 2024

கள்ளக்குறிச்சி கோவிலில் நள்ளிரவில் திருட்டு

image

கள்ளக்குறிச்சியில் நேற்று சிதம்பரேஸ்வரர் கோவில் நள்ளிரவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அரங்கேறிய இந்தசம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News November 1, 2024

கள்ளக்குறிச்சியில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க.

News November 1, 2024

உளுந்தூர்பேட்டை அருகே இளைஞர் உயிரிழப்பு

image

உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்து இளைஞர் உயிரிழப்பு. வாகனத்தில் இருந்த பட்டாசுகள் மீது, பட்டாசு ஒன்று பறந்து வந்து விழுந்ததில் வெடி விபத்து..எறையூர் கிராமத்தை சேர்ந்த 22 வயதான டேவிட் வில்சன் என்ற இளைஞர் பலி, மேலும் 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்த பட்டாசு விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 1, 2024

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கொண்டாட்டம் எப்படி இருந்தது?

image

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது?

News November 1, 2024

கள்ளக்குறிச்சியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்

News October 31, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News October 31, 2024

கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியான இன்று கள்ளக்குறிச்சி, தி.மலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 31, 2024

கள்ளக்குறிச்சி மக்களே கவனமாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட கள்ளக்குறிச்சி மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 30, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடுகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (30.10.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News October 30, 2024

கள்ளக்குறிச்சி அருகே சாலை மறியல்;46 பேர் மீது வழக்கு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தில் இன்று காலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைப்பது தொடர்பான பிரச்சனையால் கிராம மக்கள் கச்சிராயபாளையம் மாதவச்சேரி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி கச்சிராயபாளையம் போலீசார் 26 ஆண்கள், 20 பெண்கள் உட்பட 46 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

error: Content is protected !!