India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். கல்வராயன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி வட்டகிளை சார்பில் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களில் உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தந்தை பெரியார் விருது பெற சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த பணிகள் மேற்கொண்டவர்கள் டிச.20 ஆம் தேதிகுள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ரபிக் என்பவரை எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்து எஸ்டிபிஐ கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முகமது ரபிக் என்பவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றும் உத்யம் பதிவிற்கான வழிகாட்டுதலை வழங்கவும் வட்டார நிலைகளிலும், பேரூராட்சி மற்றும் நகராட்சி மட்டத்திலும் எதிர்வரும் காலங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்றும் உத்யம் பதிவிற்கான வழிகாட்டுதலை வழங்கவும் வட்டார நிலைகளிலும், பேரூராட்சி மற்றும் நகராட்சி மட்டத்திலும் எதிர்வரும் காலங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (24.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுமன் என்பவரது 6 வயது மகன் நிவின் இன்று தனது வீட்டின் ஃபேன் ஸ்விட்சை போடும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். சிறுவனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
Sorry, no posts matched your criteria.