India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் மேம்பட்ட பயிற்சியளிக்கவும் மானியத்துடன் கூடிய பிணையில்லா கடன் வழங்கவும் அவர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதனை ஆர்வமுள்ள மற்றும் தேவை உள்ள கைவினை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகரில் வரும் டிசம்பர் 28-ம் தேதி மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து பங்கேற்கும் 9 போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் மாவட்ட அளவிலான தேர்வு போட்டி வரும் 21-ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இப்போட்டி 50 வினாக்கள் கொண்ட எழுத்துத் தேர்வு ஆகும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் துணை மின் நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணி நடைபெறுவதால் சின்னசேலம், கனியாமூர், தொட்டியம்,நாட்டார்மங்கலம், ஈ சாந்தை ,மேலூர் ஆகிய மேலும் பல கிராமங்களில் நாளை (19/12/2024) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும் என மின்சார வாரியம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெண்கள் முன்னேற சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருதுக்கு https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31 தேதிக்குள் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் தொடர்புடைய குற்றவாளிகளை விசாரிக்க வேண்டிய உள்ளதால் இதை சிபிஐ விசாரித்தால்தான் சரியாக இருக்கும் என்றும், சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதால் தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இதில், சிபிஐ விசாரிப்பதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில், சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரையிலான ரயில் வழிப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் கோரிக்கை வைத்து பேசினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை இன்றுவழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 518 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது டிசம்பர் 17-ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் பாமக சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.