Kallakurichi

News December 16, 2024

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் அருகே பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). இவர் நேற்று அணைக்கட்டு பகுதியில் உள்ள தடுப்பணையில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினர் நிகழ்விடம் சென்று ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News December 16, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை மழை பெய்ய வாய்ப்பு

image

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று (16ம்தேதி) நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கி அதிகாலையில் தீவிரம் அடையத் தொடங்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக நாளை கள்ளக்குறிச்சியில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

News December 15, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (15.13.2024) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம்.

News December 15, 2024

கள்ளக்குறிச்சியில் வேலை வாய்ப்பு முகாம் 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தில் வரும் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் 1மணி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News December 15, 2024

வழக்கம் போல் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த திங்கட்கிழமை அன்று கனமழை காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

கலைஞர் கைவினை திட்டம் விண்ணப்பம் அறிவிப்பு

image

கலைஞர் கைவினைத் திட்ட மூலம் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி, ரூ.50,000 மானியம் 5 சதவீதம் வரை வட்டி மானியம், திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள், மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் msmeonline.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும் அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்

News December 14, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபடுவோருக்கு பயிற்சி, மானியத்துடன் கடன் மற்றும் சந்தைப்படுத்தும் திறன் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தையற் கலைஞர், மண்பாண்டம் செய்வோர், சிற்ப கலைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர்,தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் வாங்க ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (13.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழையே பெய்ததால்  இன்று டிச.13ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து   பள்ளி மற்றும் கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News December 12, 2024

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் தனியார் பள்ளியில் உள்ள கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில் குறித்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று துவக்கி வைத்து ஆசிரியர்களிடம் உரையாற்றினார்.

error: Content is protected !!