Kallakurichi

News December 19, 2024

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (19.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

News December 19, 2024

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

இயற்கையான முறையில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது

image

இயற்கையான முறையில் தோட்டக்கலைத்துறை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆகையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் இயற்கையான முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் வரும் 26ஆம் தேதிக்குள் www.tnhorticulture.tn.gov.in என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும் என்ன கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் குவிந்த போலீசார்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று 19.12.2024 காலை 10.00 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் செய்ய உள்ளனர். எனவே, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் குவித்துள்ளனர்.

News December 19, 2024

மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவர்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். இதில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்ட பிரிவு கோ-கோ, 19 வயது பிரிவு கபடி போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

News December 18, 2024

கள்ளக்குறிச்சி: கைவினை கலைஞர்களின் கவனத்திற்கு

image

கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் மேம்பட்ட பயிற்சியளிக்கவும் மானியத்துடன் கூடிய பிணையில்லா கடன் வழங்கவும் அவர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதனை ஆர்வமுள்ள மற்றும் தேவை உள்ள கைவினை கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 18, 2024

கள்ளக்குறிச்சி மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு 

image

விருதுநகரில் வரும் டிசம்பர் 28-ம் தேதி மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து பங்கேற்கும் 9 போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் மாவட்ட அளவிலான தேர்வு போட்டி வரும் 21-ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இப்போட்டி 50 வினாக்கள் கொண்ட எழுத்துத் தேர்வு ஆகும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News December 18, 2024

கள்ளக்குறிச்சி அருகே நாளை மின்தடை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் துணை மின் நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணி நடைபெறுவதால் சின்னசேலம், கனியாமூர், தொட்டியம்,நாட்டார்மங்கலம், ஈ சாந்தை ,மேலூர் ஆகிய மேலும் பல கிராமங்களில் நாளை (19/12/2024) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும் என மின்சார வாரியம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்  அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

News December 17, 2024

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெண்கள் முன்னேற சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருதுக்கு https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31 தேதிக்குள் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!