Kallakurichi

News December 22, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (22.13.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

News December 22, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற நீலமங்கலம் பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News December 21, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (21.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2024

கள்ளக்குறிச்சியில்  தாஜ்மஹால் கண்காட்சி

image

கள்ளக்குறிச்சியில் இன்று மாலை 6:00 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால் டிஸ்னி லேண்ட் வண்ண மலர் கண்காட்சிகளுடன் நடைபெற உள்ளது. அரையாண்டு விடுமுறை தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில், தற்போது இந்த கண்காட்சி முகாம் கள்ளக்குறிச்சி நடைபெறுவது பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

News December 21, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பெத்தாசமுத்திரம் மற்றும் திருக்கோவிலுார் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக, திருக்கோவிலூர், கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனூர், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி,, மாடாம்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

News December 20, 2024

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (20.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2024

நிலத்தகராறில் கத்திக்குத்து விவசாயிக்கு 8 ஆண்டு சிறை

image

உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுாரைச் சேர்ந்தவர் பாபு. அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். விவசாயிகளான இருவருக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்தது.கடந்த ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே கொலை மிரட்டல் வாக்குவாதம் நடந்து ஜிப்மெரில் சிகிச்சை பெற்றனர். எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நேற்று பிரகாஷுக்கு 8 ஆண்டு சிறையும் 11 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

News December 20, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை முன்னிட்டு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆரோக்கியத்துடன் படிப்பை தொடர மாலை நேர சிற்றுண்டி வழங்க பங்களிப்பாளர்கள் முன் வரலாம். விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள பள்ளி தலைமையாசிரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 19, 2024

காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சியில் நாளை டிசம்பர் இருபதாம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 19, 2024

முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு – ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளதாகவும் இலவச பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்று வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!