India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று (ஜன.15) எஸ்.பி ரஜத் சதுர்வேதி தலைமையில், போலீசார் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி தேவராஜ் எஸ்.பி, இன்ஸ்பெக்டர் சக்தி உள்ளிட்ட போலீசார் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்தபடி பொங்கல் வைத்து கொண்டாடினர்.
திருவள்ளுவா் தினமான (ஜன.15) கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பாா்கள், ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இவை கட்டாயம் மூடப்பட வேண்டும். அவ்வாறு மூடப்படாமல், மதுபானம் விற்பனையில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பாா்கள் மீது மதுபானம் விற்பனை விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.15) அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது, கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தைத்திருநாளை பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து அமைதி நிலவும் விவசாயம் வளர்ச்சி அடையவும் சமத்துவ பொங்கல் வைத்து காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திருக்கோவிலூர் உட்கோட்டை டிஎஸ்பி பார்த்திபன் கலந்து கொண்டார்.
திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, தென்பனையாற்றில் வருகிம் 18ஆம் தேதி அன்று ஆற்று திருவிழா நடத்துவது குறித்து, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் இன்று(ஜன 14) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் நேற்று துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கார் ரேஸில் இந்தியா சார்பில் பங்கேற்ற நடிகரும் கார் ரேசர்மான நடிகர் அஜித்குமார், 3ஆம் இடம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததை கொண்டாடும் விதமாக பேனர் வைத்து அஜித்குமார் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழரின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு பொங்கல் திருவிழா இனிய பொங்கல் திருவிழாவாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிபில், நாளையும், குடியரசு தினமான 26-ம் தேதியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும். மீறி திறந்து மதுபானங்கள் விற்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.