India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (12.1.2025) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது என 100-ஐ டயல் செய்யலாம்.
சின்னசேலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் சின்னசேலம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுக்கும், பாக முகவர்களுக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுகளை வழங்கினார். இதில் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள பெரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (60), விவசாயியான இவர் சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தி.மலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய நிலவரம் (கிலோ) : தக்காளி ரூ.24க்கும், கத்திரிக்காய் ரூ.40க்கும், அவரைக்காய் ரூ.110 க்கும், வெண்டை ரூ.40க்கும், முருங்கை ரூ.180க்கும், முள்ளங்கி ரூ.40க்கும், மாங்காய் ரூ. 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமர்( 55) நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து தனது இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்த போது உளுந்தூர்பேட்டை எம்.எஸ்.தக்கா பகுதியில் வந்தபோது எதிரே கோவையிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ராமரின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் தினசரி குப்பைகளை சேகரித்தல் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில், தமிழ்த்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் மரபு மாணவர் மன்றம் சார்பில் தொல்லியல் கருத்தரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சி நேற்று (ஜன.10) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். இதில், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் பொன் வெங்கடேசன், கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில் நேற்று (ஜன.10) நடைபெற்றது. முகாமில், சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சங்க பணியாளர்களிடமிருந்து 4 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர்கள் சுகுந்தலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையின் இன்றைய விலை நிலவரம் (கிலோ) : தக்காளி ரூ.18க்கும், கத்திரிக்காய் ரூ. 40க்கும், அவரைக்காய் ரூ.110க்கும், வெண்டை ரூ. 40க்கும், முருங்கைக்காய் ரூ.180க்கும், முள்ளங்கி ரூ.40க்கும், மாங்காய் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
Sorry, no posts matched your criteria.