Kallakurichi

News January 14, 2025

ஆற்று திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்

image

திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, தென்பனையாற்றில் வருகிம் 18ஆம் தேதி அன்று ஆற்று திருவிழா நடத்துவது குறித்து, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் இன்று(ஜன 14) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.

News January 14, 2025

நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்

image

சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் நேற்று துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கார் ரேஸில் இந்தியா சார்பில் பங்கேற்ற நடிகரும் கார் ரேசர்மான நடிகர் அஜித்குமார், 3ஆம் இடம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததை கொண்டாடும் விதமாக பேனர் வைத்து அஜித்குமார் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

News January 14, 2025

பொங்கல் வாழ்த்து தெரிவித்த எம்.எல்.ஏ உதயசூரியன்

image

சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழரின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு பொங்கல் திருவிழா இனிய பொங்கல் திருவிழாவாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. 

News January 14, 2025

இரு நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு: கலெக்டர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிபில், நாளையும், குடியரசு தினமான 26-ம் தேதியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக் கூடங்கள் அடைக்கப்படும். மீறி திறந்து மதுபானங்கள் விற்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

News January 13, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 13, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதி உள்ள திருநங்கைகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து வரும் பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் என தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.13) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

News January 13, 2025

அக்னிவீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க 27ம் தேதி கடைசி

image

அக்னிவீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள் என்பதால் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ, 04151 – 295422 எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

News January 13, 2025

மாசில்லா போகியை கொண்டாட உறுதியேற்போம்

image

போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த போகிக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 13, 2025

திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது; கலெக்டர் அறிவிப்பு

image

திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந்தேதி வழங்கப்பட உள்ளது. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் தகுதியான திருநங்கைகளிடம் இருந்து வரவேற்கப்படுகின்றது. விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் (awards.tn.gov.in)என்ற இணையதளத்தில் தகுதியான திருநங்கைகள் பதிவு செய்யுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!