India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்காக www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருந்து ஆவியூர் வரை மூன்று விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் மூன்று பேர் இன்று (ஜன.27) ஈடுபட்டுள்ளனர். இந்த பைக் ரேஸில் ஈடுபட்ட மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய 2 சிறுவர்கள் ரேஸில் ஈடுபட்ட போது சைலோம் பகுதியில் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே பு.கொணலவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் கொடுவாளால் மனைவியின் கழுத்தை வெட்டியதில் படுகாயமடைந்த அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் வட்டம், மூரார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 76ஆவது குடியரசு தின விழா மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கு.வேலுசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்களது நடன திறனை வெளிப்படுத்தினர். அதனைதொடர்ந்து, உதவி தலைமை ஆசிரியர் P.வேல்முருகன், R. வடிவேலு, A.ஸ்ரீராம், சி. இளையாப்பிள்ளை என பள்ளி ஆசிரியர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் முதுகலை பட்டப்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மடிக்கணினி பெற தங்களின் பெயர், அடையாள அட்டை எண், பயனாளியின் போனோபைட் சான்றிதழுடன் பூர்த்தி செய்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இங்கே <
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், தனி வட்டாட்சியா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர் முகாம்கள் இன்று நடத்தப்படவுள்ளன. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட செயலாளராக பரணி பாலாஜி என்பவரும், மாவட்ட கழக இணை செயலாளராக மோகன் என்பவரும், பொருளாளராக சுந்தரமூர்த்தி என்பவரும், துணைச்செயலாளர்களாக தமிழரசி மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் நேற்று (ஜன.24) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
Sorry, no posts matched your criteria.