India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் சட்ட முறையாக அமல்படுத்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சாலைகளுக்கு தமிழில் பெயர் கட்டாயம் எனவும், இல்லை என்றால் தொழிற்சாலை விதிகள் படி ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் காலியாக உள்ள 309 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <
சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி காமராஜ். இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து,என்பவருடன் மொபட்டில், வீர பயங்கரம் பிரிவு சாலை அருகே சென்ற போது, முன்னால் சென்ற டிராக்டர், திடீரென நின்றது. இதனால் பின்னால் சென்ற மொபட், எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியதில், காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து சின்னசேலம் போலீசார் வழக்கு.
ராஜஸ்தான் மாநிலம், இந்திரானா பகுதியை சேர்ந்த மால்சிங் மகன் சந்தன்சிங்,(18). இவர் கள்ளக்குறிச்சி, துருகம் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, அவர் தங்கியிருந்த வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிமையாக அறிந்துகொண்டு விண்ணப்பிக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் வேலைவாய்ப்புகளுக்கான https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தனிப்பட்ட இணையதளம் செயல்படுறது. இதில் குறைந்தபட்சம் ரூ.7,500 முதல் அதிகபடியாக ரூ.1 லட்சத்திற்கு அதிகமான சம்பளத்தில் 30,390 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சியில், 285 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <
கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வரும் 20ம் தேதி கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9:30 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள் 1.9.2006 தேதி அன்றோ அதன் முன்போ பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் தனது 3 கூட்டாளிகளுடன் இணையந்து பல நில மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் இடத்திற்கு அருகாமையில் இருந்த 15 செண்ட் புறம்போக்கு நிலத்தை போலி சான்றிதழ்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் விஜயன் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியன் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 16-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.