Kallakurichi

News January 29, 2025

தவெக மேற்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ் நியமனம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வெளியான இரண்டாவது பட்டியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

News January 29, 2025

ஜன.31ம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி, வங்கியாளர்கள் உட்பட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 29, 2025

சினிமா பட பாணியில் 100 ஆயில் பெட்டிகள் திருட்டு

image

பெரியபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியிலிருந்து கடந்த 5-ம் தேதி பாலசுப்பிரமணியன் ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். சர்வாய்புதூர் அருகேயுள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு பார்த்தபோது லாரியின் பின்பகுதியில் தார்பாய் கிழிக்கப்பட்டு 100 ஆயில் பெட்டிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து நேற்று (ஜன.28) சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஷேர் செய்யவும்..

News January 29, 2025

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

image

கள்ளக்குறிச்சி போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மோ.வன்னஞ்சூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் மோகூர் கிராமத்தை சேர்ந்த பாபு என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததும் தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.3,320 மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 28, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 28, 2025

ஆட்சியரகத்தில் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு கூட்டம ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிற்மைய மேலாளர் சந்திரசேகரன் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 28, 2025

மக்களுடன் முதல்வர் முகாம் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஜன.28) மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்டம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News January 28, 2025

ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள காதொலிக் கருவிகள் வழங்கல்

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று (ஜன.27) நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பாக மொத்தம் 461 மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடுடைய 6 பேருக்கு தலா ரூ.6,000 மதிப்புள்ள காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.

News January 28, 2025

கள்ளக்குறிச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜன.31) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 28, 2025

கள்ளக்குறிச்சியில் சைபர் கிரைம் அதிகரிப்பு

image

கள்ளக்குறிச்சியில் கடந்த 2024ம் ஆண்டு ஆன்லைன் மூலமாக 961 புகார்களை சைபர் கிரைம் போலீசார் பெற்றதில், 64 புகார்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 784 புகார்கள் மீது சி.எஸ்.ஆர் மட்டும் போடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.7.26 கோடி பணத்தை மக்கள் இழந்துள்ளனர். ரூ.1.78 கோடி பணம் மாற்றப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.44,144 பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ஷேர் செய்யவும்..

error: Content is protected !!