India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகள் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் காவல்துறை சார்ந்த அதிகாரிகள் பல பங்கேற்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த அதையூர் சேர்ந்தவர் முபாரக்அலி (36). பெயிண்டரான இவர் காட்டுஎடையாரில் வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் இருந்த அலுமினியத்தால் ஆன பெயின்ட் ரோலர், அருகில் சென்ற மின்கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். முபாரக்அலியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோழிக்கழிச்சல் தடுப்பு முகாம் கோழி வளர்ப்போரின் பொருளாதார இழப்பைத் தடுக்கும் வகையில் வருகிற 01-02-2025 முதல் 14-02-2025 வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களில் நடத்தப்படவுள்ளது. ஆகவே கோழி வளர்ப்போர் முகாம்களில் கலந்து கொண்டு கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை கண்டறிந்து தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 13 ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் துறை அலுவலர்கள் பங்கேற்று தங்களது துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விவரிக்க உள்ளனர். சுயதொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (ஜன.31) சேந்தநாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக,கூட்டடி கள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குடி, சேந்தநாடு, தொப்பையான்குளம், வைப்பாளையம், களத்தூர், கிருஷ்ணா ரெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை மத்திய காலனி பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாத், பயிற்சி மையத்தின் இயக்குனர், சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான நலத்திட்ட பணிகள் குறித்தும் அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Sorry, no posts matched your criteria.