Kallakurichi

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

திருமணத்தில் மொய் பணத்தை திருடிச் சென்ற பெண்

image

கச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் சதீஷ்க்கு கடந்த 10ஆம் தேதி, திருக்கோவிலூர், கீழையூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது. அப்போது, மொய் பணம் ஒரு லட்சம் ரூபாயை பையில் வைத்திருந்தார். அவரது அருகில் இருந்த அமர்ந்திருந்த பெண் ஒருவர் பணம் வைத்திருந்த பையை திருடிச் சென்றார். புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 16, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் .<>விண்ணப்பிக்கலாம்<<>>

News February 16, 2025

ரூ.2.23 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை: கலெக்டர் தகவல்

image

கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலை வி.எம் திடலில் 3வது கல்லை புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் பிப்ரவரி 14-ம் தேதி துவங்கியது. பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாள் விழாவில், மொத்தம் 20,075 பேர் கண்டுகளித்தனர். 2 லட்சத்து 23 ஆயிரத்து 594 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

பைக்கில் சென்ற டெய்லர், வாகனம் மோதி உயிரிழப்பு

image

பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்.இவர் நேற்று திருக்கோவிலுார் – மணலுார்பேட்டை சாலை வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.பிள்ளையார் பாளையம், தனபால் என்பவரின் நிலத்தின் அருகில் சென்ற போது, எதிரில் வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் உயிரிழந்தார். இது குறித்து நேற்று போலீசார் வழக்குப்பதித்தனர்.

News February 16, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 15.2.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News February 15, 2025

புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் வி.எம் திடல் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாவது கல்லை புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று பொது மக்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 15, 2025

வரலாற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோவில்

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தஞ்சை பெரியகோவில் கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் வீரசோழபுரம் சிவன்கோவிலை கட்டியதாக வரலாறு உள்ளது. தந்தை இறந்த பின் ராஜேந்திரசோழன், அவருடைய அஸ்தியை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டு கங்கை கொண்ட சோழபுரம் வழியாக வீரசோழபுரம் வந்ததாக சொல்லப்படுகிறது.

News February 15, 2025

பாஜக பெண் நிர்வாகி மீது ரூ.20 லட்சம் மோசடி புகார்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார் பேட்டைமேடு பகுதியை சேர்ந்த பாஜக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சிவசக்தி 100 நாள் வேலைத்திட்ட பணியை மேற்பார்வையாளராக இருந்துள்ளார். தற்போது, அந்த பணியில் இல்லை. 100 நாள் வேலை பணியாளர்களின் ஆதார் நகலை வைத்து ரூ.20 லட்சம் மோசடி செய்துள்ளதாக டிஎஸ்பியிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!