Kallakurichi

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 28, 2025

அண்ணாமலை பரப்புவது தவறான தகவல்

image

அண்ணாமலை பரப்புவது தவறான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்திற்கு 66 உயிர்களை பலிகொண்ட வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் சாராயம் காய்ச்சியதாக மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

News February 28, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், உள்ளாட்சி அமைப்புகளில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (27.02.2025) நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 27, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 27, 2025

மாவட்டத்தில் நான்கு துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் நான்கு பேரை பணியிடை மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் பாண்டி, சுதாகர், சண்முகம், சிங்காரவேல் ஆகிய நான்கு பேரை பணியிடை மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

News February 27, 2025

மூன்று துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வாணாபுரம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பரந்தாமன் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியராகவும், உளுந்தூர்பேட்டை மண்டல துணை வட்டாட்சியர் கனகபூரணி சின்னசேலம் (ச.பா.தி) வட்டாட்சியராகவும் என மூன்று பேருக்கு பதவி உயர்வு வழங்கி இன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News February 27, 2025

கள்ளக்குறிச்சியில் 6 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக உள்ள பாலகுரு சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராகவும், தென்னக ரயில்வே தனி வட்டாட்சியராக உள்ள சரவணன் கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் தனி வட்டாட்சியராகவும், சின்னசேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக உள்ள விஜயன் சங்கராபுரம் வட்டாட்சியராகவும் என 6 பேரை பணியிடை மாற்றம் செய்தூ மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

News February 27, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் 2014ஆம் ஆண்டு 42 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகளில் தனிநபர்கள் இடையூறு செய்வதாக புகார் பெறப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளில் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News February 27, 2025

நாளை விவசாயிகள் குறைக் கேட்பு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை விவசாயிகள் குறைக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வேளாண்துறை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, ஊழியர்கள் விவசாயிகளுக்கு பதில் அளிக்கின்றனர்.

News February 27, 2025

கள்ளக்குறிச்சியில் சாலை விபத்தில் மேலும் ஒருவர் மரணம்

image

கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று மதியம் மாவட்ட அஞ்சல் துறை அலுவலகம் முன்பு தாய் மற்றும் மகன் விபத்தில் உயிரிழந்த நிலையில் 7.30 மணி அளவில் துருகம் சாலையில் ஆகாஷ் என்ற வாலிபர் ஓட்டி வந்த வாகனமும் மணி என்பவரது இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!