India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபடியாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று காலை தொடங்கிய நிலையில், 8,910 மாணவர்கள், 9,318 மாணவியர் என மொத்தம் 18,228 பேர் தேர்வெழுதினர். 273 மாணவர்கள், 251 மாணவிகள் என 524 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களில் 90 ஆண்கள், 94 பெண்கள் என 184 பேர் நேற்று தேர்வெழுதினர். 30 பேர் தேர்வுக்கு வரவில்லை.
துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது. தற்போது, 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களின் நலன் கருதி மின்வாரியம் மார்ச் மாதம் முழுவதும் மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மினி பேருந்து விரிவான திட்டம் 2024 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்து மினி பேருந்து உரிமையாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மினி பேருந்து உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் வசித்து வரும் கிராம நிர்வாக அலுவலரின் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா மற்றும் பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகை, 535 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையராக பதவி வகித்து வந்த குப்புசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையராக செந்தில்குமார் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கலால் உதவி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு சக அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவருடன் சின்னசேலம் தாசில்தார் மற்றும் கள்ளக்குறிச்சி நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பயன்பெற வருமான உச்சவரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தகுதியான பயனாளிகள் மார்ச் 15ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.