India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்தி, திருக்கோவிலூரில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து அமைப்பினர் ஒருங்கிணைந்து இன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைபடத்தினையும் வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
மின் பராமரிப்பு காரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுருகம், ரிஷிவந்தியம், நாகளூர், நிறைமதி, O.H.T, பழைய சிறுவாங்கூர், நகரம், நூரலை, எலவனாசூர்கோட்டை, மணலூர்பேட்டை, அத்திப்பாக்கம், காங்கேயனூர், அருந்தங்குடி, மூர்க்கன்பாடி, திருவரங்கம், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, செம்பக்குறிச்சி, பாக்கம்பாடி, குகையூர், நைனார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை வரை மின் தடை செய்யப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் துவங்குகிறது. இந்த முகாம் வரும், மார்ச் 19ம் தேதி வரை நடக்கிறது. கறவை மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் கால்நடைகளுடன் முகாமில் பங்கேற்று பயனடைலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சீயமங்கலம் கிராமத்தில் பூபாலன் மற்றும் கோபால் இருவருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று பூபாலன் மகன் 11ஆம் வகுப்பு படிக்கும் பார்த்தசாரதியை கோபால் மகன்கள் தங்கதுரை, தர்மதுரை ஆகிய இருவரும் கத்தியால் வெட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தங்கதுரை மற்றும் தர்மதுரை ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறையில் பிப்.23-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில், மயிலாம்பாறை புனித ஜோசப் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் விவரங்களுக்கு 88072 04332, 04151-295422 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
செங்குறிச்சி சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியனுக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு டிச., 5ஆம் தேதி சுப்ரமணியனின் பேரன்கள் சுபாஷ், சுதாகர் இருவரும் அய்யப்பன் மகளிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உளுந்தூர்பேட்டை மாஜிஸ்திரேட் கோமதி, சுப்ரமணியன், சுபாஷ் ஆகியோருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.