India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று (ஏப்.30) கள்ளக்குறிச்சியில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். முடியாதவர்கள் கல் உப்பு வாங்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 29-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் POSH சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளூர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் 0451228800, 9597846790, 8825894085, 9976992480, 997605067, 93616664416 போன்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விற்பனை செயலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 35 வயத்திற்குள் இருக்க வேண்டும். இரு பாலினத்தவர்களும் வரும் மே.2ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் (சின்னசேலம் பைபாஸ், EB அலுவலகம் அருகில்) நடைபெறும் நேர்க்காணலில் சுயவிவரத்தை பூர்த்திசெய்து உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
கரடியாரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 2024ஆம் ஆண்டு குழந்தை திருமணம் நடைபெற்றது. தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த போது அவர் 18 வயது பூர்த்தி அடையவில்லை என மருத்துவர்கள் கண்டறிந்தனர். தகவலின் அடிப்படையில் குழந்தை திருமணம் செய்த கலர்புரத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது சகோதரர் முருகேசன், அவரது மனைவி அலமேலு ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் கள்ளக்குறிச்சி உட்பட 16 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
▶️ கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்- பிரசாந்த் (04151-228802)
▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- ரஜத் R சதுா்வேதி (04151-221313)
▶️ மாவட்ட வருவாய் அலுவலர்- ஜீவா (04151-228800)
முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்
மாவட்டத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான, தொகுதி திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.பிளஸ் 2 வகுப்பு வரை கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், 15 நாட்கள் கிராமங்களில் தங்கும் ஆர்வம் இருக்க வேண்டும். மாதத்திற்கு ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் 30 சதவீத பயணப்படி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 27-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.