India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநாவலூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று மாலை வங்கிப் பணிகள் முடிவடைந்து வங்கியின் மேலாளர் வங்கி மூடிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது வங்கியின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.உடனடியாக வங்கி மேலாளர் வங்கி உள்ளே சென்று பார்த்தபோது பணம் நகைகள் ஏதும் திருடு போகவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தானம், மற்றும் மயிலாடுந்தாங்கல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியன் கலந்து கொண்டார்.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கள்ளக்குறிச்சியில் பணியிட பாலியல் புகார்கள் குறித்து, உதவி எண், 181ல், பெண்கள் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் பயிற்சி பட்டறை நடந்தது. அனைத்து அலுவலகங்களிலும் உள்ளகக் குழு அமைத்தல், புகார் பெட்டி, 181, இணையதளம் வழியாக புகார்களை தெரிவிக்கலாம் எனக் கலெக்டர் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் துறை சார்ந்த பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு வரும் மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்களில் மொத்தமாக 1691 தேர்வாளர்கள் கணினி வழியில் தேர்வு எழுத உள்ளனர். இதில் 69 மாற்றுத்திறனாளிகளும், 25 மாற்றுத்திறனாளிகள் சொல்லி எழுதுபவர்களும் கலந்து கொள்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் காவல் உட்கோட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப் பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்களது பகுதியில் போதைப் பொருட்கள் விற்பதோ அல்லது பயன்படுத்துவதோ குறித்து தகவல் கிடைத்தால் 9626121985 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் பெயர், விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நல அலுவலகம் மூலம் ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்த தகுதியான பயனாளிகள் வரும் 15ஆம் தேதிக்குள் இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.