India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பதியப்பட்ட வாக்குகள் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் முதல் சுற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக மலையரசன் – 22,712, அதிமுக குமரகுரு – 22,324, பாமக தேவதாஸ் – 2587, நாமக ஜெகதீசன் – 2379, இதில் திமுக வேட்பாளர் – 388 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கள்ளக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 70.25% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளகளாக திமுக சார்பில் மலையரசனும், அதிமுக சார்பில் குமரகுருவும், பாஜக சார்பில் தேவதாஸ் உடையாரும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் திருக்கோயில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் குமரகுரு அதிமுக நிர்வாகிகளுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், இன்று சித்தலூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று(ஜூன் 3) நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல பகுதியில் வெளியிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப ஆலை வீசி வந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சின்ன சேலம் அருகே உள்ள நாககுப்பம் கிராமத்தில் இன்று விடியற்காலையில் 15 பேர் ஏறக்கூடிய மினி பஸ்ஸில் சுற்றுலா செல்வதற்காக அப்பகுதியில் உள்ளவர்கள் கிளம்பி உள்ளனர் கிளம்பிய 500 மீட்டர் தூரத்தில் மினி பஸ் கவிழ்ந்தது இதில் அடிபட்டவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்ன சேலம் அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதில் மணிமாறன்(35) என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் நாளை, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜூன்.01) நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடத்துவது குறித்து எம்எல்ஏ மணிக்கண்ணன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ் , மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.