India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜெயமுருகன் மற்றும் இளையராஜா என்போரின் உயிரிழப்பிற்கு விஷ சாராயம் தான் காரணம் என உறுதியாவதற்கு முன்பே இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், புதைக்கப்பட்ட ஜெயமுருகனின் உடலை கூறாய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்னொருவரின் உடல் எரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் இன்று (ஜூன் 22) நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் இருந்தனர்.
கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் முக்கிய குற்றிவாளியான கண்ணுக்குட்டி (கோவிந்தராஜ்), 2000 ஆம் ஆண்டில் கள்ளச்சாராய வழக்கில் குண்டாஸில் கைதாகியுள்ளார். அதை தொடர்ந்து பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர்களில் பெரும்பாலானோர் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள். குறைந்த விலை என்பதாலேயே சாராயத்தை குடிப்பதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக சாராயம் விற்கும் கண்ணுக்குட்டிக்கு குடிப்பழக்கம் கிடையாது.
சின்னசேலம் அருகே நேற்று(ஜூன் 21) நள்ளிரவில் சென்னையை நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியது. அம்மையகரம் பகுதியில் வரும்போது எதிரே சென்று கொண்டிருந்த வெஹிகிள் பிரி சுற்றும் இயந்திரம் டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டு சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. காயம்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்கு அஞ்சி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய நபர் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு அஞ்சி தப்பித சுப்பிரமணி என்பவரின் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவரை மருத்துவமனை அழைத்து வந்த நிலையில் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகளால் திக்குமுக்காடியுள்ளது கருணாபுரம் பகுதி. 50க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 21)நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் மேலும் தீவிர சிகிச்சை அளிக்குமாறும் அறிவுறுத்தினார். உடன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு ஆகியோர் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு 18 வயது வரை மாதம் ரூ.5,000 பராமரிப்பு தொகையாக வழங்கப்படும் என்றும், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வருங்கால வைப்பு நிதியாக வைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சிகிச்சைபெற வராமல் வீட்டில் இருப்பவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்புலன்சுகளில் 40 பேர் கொண்ட மருத்துவக் குழு இப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 120க்கும் மேற்போட்டோர் சிகிச்சை பெற்ற நிலையில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.