India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள,VAS திருமண மண்டபம் அருகில்
நாளை (ஜூன். 24) காலை 9.00 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு தலைமை தாங்கி கண்டன உரையாற்ற உள்ளார். எனவும், இதில், திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி அதிமுக
மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்குச் சென்ற பேர் மாயம் என்ற செய்தி பரவி வருகிறது. 7 பேர் சாராய வேட்டை முடித்து ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்துள்ளனர். அனைவரும் நலமாக உள்ளதாகவும், தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நடிகர் கமல் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுவரை 57 உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதன் மூலம் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாத்தை கொடுக்க முடியும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “மரக்காணத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்களைப் போல, இதுவும் நீர்த்துப்போய்விடக் கூடாது. விசாரணை ஆணையம் அமைத்துவிட்டோம் என்பதோடு இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த சிவகுமார் என்ற முக்கிய குற்றவாளியை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். மேலும், ஏற்கெனவே கைதான மாதேஷ் என்பவரின் நண்பர்களான தற்போது சக்திவேல் மற்றும் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 104 பேரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் சிகிச்சையில் உள்ள 108 பேரில் 104 பேரில் உடலில் சீராக உள்ளது என கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஜிப்ரில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேர் டீஸ்சார்ச் செய்யப்பட்டு தற்போது 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து 57 பேர் உயிரிழந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மெத்தானால் சப்ளை செய்த முக்கிய நபரான சிவக்குமாரை சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் போலிசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலிசார் கள்ளக்குறிச்சி அழைத்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.