Kallakurichi

News July 2, 2024

வருவாய்த் துறை அலுவலகத்திற்கு புதிய வாகனம்

image

கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர்களுக்கும், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை மற்றும் சங்கராபுரம் ஆகிய வருவாய் வட்டாட்சியர்களுக்கும் அலுவலக பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று புதிய வாகனங்கள வழங்கினார். இதில், மொத்தம் 5 வாகனங்கள் வழங்கப்பட்டன.

News July 2, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “2024-2025 ஆம் ஆண்டிற்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்த நெல்(சொர்ணவாரி)-Iமற்றும் கம்பு பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். மேலும், நெல்(சொர்ணவாரி)-I பயிருக்கு 31.07.2024 மற்றும் கம்பு பயிருக்கு 16.08.2024-ம் தேதி வரையில் பயிருக்கு காப்பீடு செய்யலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

News July 1, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து குடிநீர்வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி, வேலைவாய்ப்பு வேண்டி, இலவச வீட்டு மனை பட்டா மனுக்கள் என 603 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 38 மனுக்களும் என மொத்தம் 641 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மனுக்களின் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

News July 1, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக கள்ளக்குறிச்சியை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

கள்ளக்குறிச்சியில் ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜித் சதுர்வேதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தடுத்திடும் பொருட்டு 562 கிராம அளவிலான கண்காணிப்பு குழு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

News July 1, 2024

பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகளை வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ.4.2 லட்ச மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வழங்கினார்.பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலியை பெற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

News July 1, 2024

மாற்றுதிறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் விபத்தினால் கண்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளி சுரேஷ்குமார் என்பவருக்கு ரூ.2 லட்சம் நிவாரன தொகையும்
மற்றும் இயற்கை மரணம் எய்திய மாற்றுத்திறனாளி வாரிசுகளுக்கு ரூ.17000 வீதம் நான்கு மாற்றுத்திறனாளிகளிக்கு ரூ.85000 தொகைக்கான காசோலைகளை இன்று ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார்.

News July 1, 2024

கள்ளக்குறிச்சி விவகாரம்: ஐகோர்ட் விசாரணை

image

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரன் அமர்வு விசாரிக்க உள்ளனர். கல்வராயன் மலை பகுதி மக்களின் சமூக, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு தலையிட்டோம் எனக்கூறிய நீதிமன்றம் சேலம், கள்ளக்குறிச்சி கலெக்டர்கள், எஸ்பிக்கள் மற்றும் தலைமைச்செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

News July 1, 2024

கள்ளக்குறிச்சி மின் அலுவலகம் இடமாற்றம்

image

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் அமைந்திருக்கும் மின் அலுவலகம் இன்றூ (ஜூலை 1) முதல் ராஜா நகர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி கிராம நிர்வாக அலுவலகமும் ஏமப்பேர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை மின் செயற்பொறியாளர் கணேசன் அறிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு 9445855813, 9445979081 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களைவிசாரிக்க சிபிஐ மனு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான 21 நபர்களில் மீண்டும் 11 பேரை ஐந்து நாட்கள் விசாரணை செய்ய அனுமதிக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவானது ஜூலை 1ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும் இவ்வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் மற்றும் முக்கிய நபர்களை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!