Kallakurichi

News August 4, 2025

கள்ளக்குறிச்சியில் 8 உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளராக பணி உயர்வு

image

தமிழ்நாடு முழுவதும் இன்று 280 காவல் உதவி ஆய்வாளர்கள் தர நிலை உயர்வு உயர்த்தி காவல் ஆய்வாளர்களாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரஞ்சரம், கீழ்குப்பம், எடைக்கல், கரியாலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, எலவனாசூர்கோட்டை, மணலூர்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராக பணியாற்று வரும் காவலர்கள் ஆய்வாளர்களாக பதிவு உயர்வு அடைந்துள்ளனர்.

News August 4, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News August 4, 2025

கள்ளக்குறிச்சி: BCA, B.Sc, CS, MCA முடித்தவர்களுக்கு வேலை

image

கள்ளக்குறிச்சி மக்களே தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இலவசமாக ஐ.டி பயிற்சி அளிக்க உள்ளது. மாணவர்களுக்கு இலவச தங்கும் இடம், உணவு வசதி & ரூ.12,000 உதவித்தொகை கிடைக்கும். 2022-25 ம் ஆண்டில் CSE,ECE,EEE/BCA, B.Sc, CS, MCA பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள்<> இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶கள்ளக்குறிச்சியில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு (1/2)

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இந்த பாலிசி குறித்து தெரிந்து கொள்ள கள்ளக்குறிச்சி அதிகாரிகளை (04151-222441) தொடர்பு கொள்ளுங்கள். <<17028497>>தொடர்ச்சி<<>>

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶இந்த லிங்கில் கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் சண்டையை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்!

image

திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் நேற்று (ஜூலை 10) சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த சண்டையை தடுக்க சென்ற ரமேஷ் என்பவரையும் விஜய் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் விஜய் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் கல்லை டிஜிட்டல் டிரைவ்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து புத்தொழில் சூழலியலை வலுப்படுத்தும் நோக்கத்தில், “கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று (ஜூலை 10) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 11, 2025

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் நகராட்சியில் சுமார் 3,413 உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வீடு வீடாக வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் திருக்கோவிலூர் நகராட்சியில் ஜூலை 17 ஆம் தேதியன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் குரூப் 4 தேர்வு கண்காணிப்பு பணிகள் தீவிரம்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு நாளை (ஜூலை 12) நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 97 தேர்வு கூடங்களில் 28,211 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வினை கண்காணிப்பதற்காக 30 சுற்றுச்சூழல், 102 காவல் அலுவலர்கள், 97 கண்காணிப்பு அலுவலர்கள், 10 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!