India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மையனூர் கிராமத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் எம்.எஸ். பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, இருவரும் மாணவர்களுக்கு உணவை ஊட்டி விட்டனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இன்று காலை 10 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18,650 பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் தினமும் 1,53,000 லிட்டர் பால் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், 68 பால் விற்பனை முகவர்களும் உள்ளனர் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும் உறுப்பினர்களை அதிகரித்து, பால் கொள்முதலையும் அதிகரிக்க வேண்டும் என அவர் அதிகாரி கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசின் பாரம்பரிய மரபு சார் இயக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் இரகங்கள் தூயமல்லி, செங்கல்பட்டு சிறுமணி, பூங்கார், கருங்குருவை ஆகியவை அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கி முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக்கொண்டார்.
சின்னசேலம் அருகே உள்ள குரால் பிரிவு சாலையில், தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேற்று(ஜூலை 13) சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து, உயர்தர சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் காயங்களுடன் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி, சின்னசேலம் வரிவாய் வட்டாட்சியராக பணியாற்றி வந்த ஜே. கமலகண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், புதிய வருவாய் வட்டாட்சியராக சற்றுமுன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிவா முன்னணியில் உள்ளார். இதையடுத்து திமுக வெற்றி உறுதியானதாக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தியாகத்துருகம் பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். உடன் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக பணியாற்றிய கமலக்கண்ணன், சின்ன சேலம் வருவாய் வட்டாட்சியராக இருந்த மனோஜ் முனியன் என மொத்தமாக 11 வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் இன்று(ஜீலை 13) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வட்டம் எறஞ்சி கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்காக விவசாயிகளின் பட்டா நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த பல விவசாயிகள் இன்று கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வட்டாட்சியர் பிரபாகரனை முற்றுகையிட்டு எதற்காக நிலம் ஆய்வு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.