Kallakurichi

News July 5, 2024

தனியார் இல்லம், விடுதிகளுக்கு உரிமம் பெற ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுதல் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுவதற்கான படிவங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

செங்கற்கள் தேவை – ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்படவுள்ள 3500 வீடுகளுக்கு சுமார் 3 கோடி எண்ணிக்கையில் செங்கற்கள் தேவைப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செங்கற்கள் தயாரிக்கும் நிறுவனம் அல்லது புதிதாக செங்கற்கள் தயாரித்து விநியோகம் செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜூலை 5) அறிவித்துள்ளார்.

News July 5, 2024

கள்ளச்சாராய விவகாரம் தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் இதுவரை 65 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், எதன் அடிப்படையில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை 5) கேள்வி எழுப்பி உள்ளது.

News July 5, 2024

தொழில்நெறி தொடர்பான நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது. மேலும் ஜூலை 9 முதல் 12ஆம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் வாரம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நிகழ்ச்சிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 5, 2024

கள்ளக்குறிச்சி எஸ்பி எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி நேற்று (4 -7-2024) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 4, 2024

கள்ளக்குறிச்சி எஸ்பி எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி இன்று (4-7-2024) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 4, 2024

போதையை அதிகரிக்க மெத்தனால் கலந்ததாக வாக்குமூலம்

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜ், விஜயா மற்றும் சின்னதுரை ஆகியோர், மது அருந்துவோரின் கோரிக்கையை ஏற்று போதையை அதிகரிக்க மெத்தனால் கலந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும், எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது தங்களுக்கே அதிர்ச்சி அளிப்பதாகவும் நேற்று சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

News July 4, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் 58 இடைநிலை, 53 பட்டதாரி மற்றும் 8 முதுகலைப் பட்டதாரிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு பணிநாடுநர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 10.07.2024 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

கள்ளக்குறிச்சி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு மாதத்திற்குள் விசாரணை முடிவடையாத பட்சத்தில் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News July 3, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் 58 இடைநிலை, 53 பட்டதாரி மற்றும் 8 முதுகலைப் பட்டதாரிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு பணிநாடுநர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 10.07.2024 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!