Kallakurichi

News August 26, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (ஆக.27) திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் களமருதூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல்லவாடி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கூர் கிராமத்திலும், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ரிஷிவந்தியம் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

உளுந்தூர்பேட்டையில் பிரபல சின்னத்திரை நடிகை 

image

உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரஷாந்த் டான்ஸ் ஸ்டுடியோவின் நூறாவது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற விழாவில் சின்னத்திரை பிரபல நடிகை தீபா பங்கேற்று, நிகழ்ச்சியில் சிறப்பான நடனத்திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

News August 25, 2024

கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகள், குளங்களில் இருந்து மண் எடுப்பதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த தெரிவித்துள்ளார். ஏரி, குளங்களில் இருந்து மண் எடுப்பதை சிலா் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, ஏரிகளில் மண் வெட்டி எடுக்கப்பட்ட அளவு மீறாமல் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள அளவுகளுக்கு மீண்டும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

News August 24, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு உட்பட்ட கரும்புகளை தனியார் ஆலைகளுக்கு ஏற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். ஆலையின் அங்கத்தினர்கள் கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விற்காமல் கள்ளக்குறிச்சி -2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்குமாறு ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News August 24, 2024

கோயில் இடத்தில் பதாகை வைத்து மீட்க கோரிக்கை

image

சின்னசேலத்தில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கான சொத்துக்கள் சின்னசேலம் முழுவதும் ஆங்காங்கே இருந்து வருகின்றன. இந்த நிலையில், அம்சா குளம் அருகே உள்ள 70 சென்ட் நிலத்தை தட்டுப்புல் வைப்பதற்கு மானியத்திற்கு விடப்பட்டது. இந்த இடத்தை தற்போது தனிநபர் ஷேக் தாவுத்தான் என்ற பெயரில் பட்டா (5965) என்ற எண்ணில் அரசு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். இதனை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News August 24, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக.27ல் மக்களுடன் முதல்வர் முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக.27ஆம் தேதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் களமருதூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல்லவாடி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கூர் கிராமத்திலும், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ரிஷிவந்தியம் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News August 24, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று பள்ளி வேலை நாள் ரத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமை வேலைநாள் ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டார். 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலை நாள் அண்மையில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2024

மண்வெட்டி எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை ஏரிகளில் இலவசமாக மண்வெட்டி எடுத்து வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி அன்று மாலைக்குள் ஏரிகளில் இருந்து மண் வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News August 24, 2024

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் படை வீரர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்

News August 23, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேருக்கும் மேற்பட்டவர்கக்ள் இறந்தனர். இவ்வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாதேஷ், சிவகுமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய நான்கு பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

error: Content is protected !!