India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வடகீரனூர் கிராமத்திலும், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் அம்மகளத்தூர் கிராமத்திலும், திருநாவலூர் ஊராட்சி
ஒன்றியத்தில் செங்குறிச்சி கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில்
கிளியூர் கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கூவனூர் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடைபெறவுள்ளதாக ஆட்சியர் நேற்று அறிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (27.08.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாங்குளம் நீர்நிலை மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் செங்கோடவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனுதாரர் அளித்த மனுவை 12 வாரங்களில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
உளுந்தூர்பேட்டையில் உலக தரத்தில் அமைய பெற்று வரும் காலனி தொழிற்சாலையில் பணிபுரிவதற்கான காலணிகள் சார்ந்த மத்திய காலனி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கை விண்ணப்பங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வெணாமி இறால் வளர்க்கும் பண்ணைகளை பதிவு செய்தல் வேண்டும் என்றும், இறால் வளர்க்கும் பண்ணை உரிமையாளர்கள் தங்களது பண்ணைகளை பதிவு செய்திட விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்துள்ளார்.
சின்னசேலம் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியான முறையில் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆகஸ்ட் 26-ம் தேதி சின்னசேலம் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் நபர்கள் பலர் கலந்து கொண்டனர்
சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலை விருதாச்சலம் டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மாரிமுத்து (40) என்பவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பிரேதத்தை எஸ் ஐ திரு சந்திரன் கைப்பற்றி கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தியாகதுருகத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் இருசக்கர வாகனத்தில் புக்குளம் டாஸ்மாக் கடையிலிருந்து வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை நோக்கிச் சென்ற சையத் இம்ரான் என்பவர் ஏழுமலை மீது நேற்று மோதினார்.இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் சையத் இம்ரான் மற்றும் அடையாளம் தெரியாத 20 நபர்கள் கும்பலாக வந்து தாக்கியுள்ளனர்.சையது இம்ரான் மற்றும் இருபது பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவின்பேரில் தனக்கனந்தல் ஊராட்சி செயலாளர் ஜெகநாதன் தற்காலி பணிநீக்கம் செய்யப்பட்டார். தனக்கனந்தலில் நேற்று குடிநீர் குடித்த மக்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வரும் செப்.1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, சமயபுரம், மதுரை, எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.