India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் ஆக. 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், அவரைச் சேர்ந்தவர்கள் அல்லது அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை தெளிவாக இரண்டு பிரதிகள் எழுதி மனுவாக வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன் மலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆகஸ்டு 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 21.08.2024 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும் மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதிரி பாகங்களை இணைத்து சைக்கிள் பிட்டிங் செய்யும் பணிகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்பள்ளியில் தயாராகும் இலவச சைக்கிள்கள் வாகனங்கள் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை 20ஆம் தேதி பழைய சிறுவாங்கூர், பாரிக்கல், சீதேவி, காடியார், பொய்க்குணம் கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாமில் 15 துறைகளை சார்ந்த அதிகாரிகள் மனுக்களை பெறுகின்றனர். சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம், என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சாலை போடும் பணி நடைபெற்று வருவதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் வாகனங்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
கள்ளக்குறிச்சியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மேகம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் கல்ராயன் மலையின் அடிவாரத்தில் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியை அடைய மலையேற்றம் செய்ய வேண்டும். நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் உள்ள பாறைப் பிளவுகள் ஆழமாகவும் குறுகலாகவும் இருக்கலாம். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்தில் மட்டும் இந்த அருவியில் தண்ணீர் வரும்.
Sorry, no posts matched your criteria.