India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம், முழுவதும் 15 துறைகள் சார்ந்த பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று கல்வராயன்மலை சேராப்பட்டு, சின்னசேலம் ஊராட்சி காளசமுத்திரம், கள்ளக்குறிச்சி ஊராட்சி தென்தரசலூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில், நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த வருடத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், விவசாய வேளாண்மை துறை, வேளாண் தோட்டக்கலை துறை, பிற துறைகள், வங்கியர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் 1.60 கோடி ரூபாயை ஏமாற்றியதாக புகார் அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர் அணி இணை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சிவக்குமார் ஆகியோரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சின்னசேலம் அருகே உள்ள அம்மா வளத்தூர் கிராமத்தில் இன்று முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு, அதில் பல துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மனுக்கள் வாங்கப்பட்டன. குடும்ப அட்டைக்கான மின்னணு பதிவு செய்யப்பட்டு, உடனடியாக 9 பேருக்கு மின்னணு மூலம் புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அந்தியூர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன்.மனைவி சூரியகலா. இவர்களுக்கு கோபி என்ற இரண்டரை வயது மகன் உள்ளார். இன்று வீட்டிற்கு வெளியே விளையாட சென்ற சிறுவன் கோபி வீட்டில் அருகே உள்ள குடிநீர் தொட்டியின் உள்ளே விழுந்துள்ளார். இதனால் கோபிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சியில் மீன் மார்க்கெட்டிற்கு என்று தனி இடம் கிடையாது. இதனால் மந்தைவெளி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பின்புறத்தில் தனியார் வாடகை கட்டடத்தில் கடைகள் மீன் மார்க்கெட்டாக இயங்கி வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வளாகத்தில், மீன்கள் விற்பனைக்காக ₹ 15 லட்சம் மதிப்பில் 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருநாவலுார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருநாவலுார், செம்மணந்தல் , ஆவலம் , குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியாப்பேட்டை, மேட்டாத்துார், சிறுளாபட்டு, பெரியபட்டு, தேவியானந்தல், மேட்டாத்துார், கிழக்குமருதுார், காமாட்சிப்பேட்டை, திடீர்குப்பம், குடுமியான்குப்பம் பகுதிகளில் மாதாந்திர பணிக்காக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது கூரை வீட்டினை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து இளங்கோ மீது விழுந்தது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக, சின்ன சேலம், தோட்டப்பாடி, வேப்பநத்தம், தலைவாசல், தியாகனுர், நமச்சிவாயபுரம், சிறுவத்தூர், தொட்டபடி, ஏலவடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் குடை எடுத்து செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
Sorry, no posts matched your criteria.