Kallakurichi

News August 30, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று மாலை கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 9 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

விநாயகர் சதுர்த்தி வழிபாடு நெறிமுறைகள் வெளியீடு

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ளார். பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான உரிய அனுமதி பெற வேண்டும், மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

News August 30, 2024

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவம் தொடக்கம்

image

கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொண்டு வரவை பருவத்தை தொடங்கி வைத்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் ப. மோகன், சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் விஷ்ணு மற்றும் விவசாயிகள், மக்கள் கலந்து கொண்டனர்.

News August 30, 2024

கள்ளக்குறிச்சியில் விசிக போராட்டம் ரத்து

image

வாசுதேவனூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியினை அகற்றிய வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News August 30, 2024

அதிமுகவில் இருந்து நீக்கினார் இபிஎஸ்

image

மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் போட்டியிட சீட் வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.60 கோடி வாங்கி மோசடி செய்ததாக, கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டு பண்ணியதாகக் கூறி, புகார் அளித்த அதிமுக நிர்வாகி கிருஷ்ணன் மற்றும் அரசூர் சிவா ஆகியோரை இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.

News August 29, 2024

சின்னசேலம் சார் பதிவாளர் சஸ்பெண்ட்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளராக சிவக்குமார் 2014 ஆம் ஆண்டு பணியாற்றியபோது வனத்துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபர்களுக்கு 16 பத்திரப்பதிவுகள் மேற்கொண்டதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து தற்போது சின்னசேலம் சார் பதிவாளர் சிவகுமாரை சென்னை பத்திரப்பதிவு தலைவர் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்

News August 29, 2024

கள்ளக்குறிச்சி திமுக அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகிற செப்டம்பர் மாதம் திமுக பவள விழா, பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.அதற்கான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 29, 2024

பள்ளிகளுக்கு கள்ளக்குறிச்சி கல்வி அலுவலர் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கலை திருவிழா இன்று துவங்கிய நிலையில், பள்ளிகளில் புகார் ஏற்படாத வண்ணமும், கலை திருவிழாவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பும், முதல் மூன்று மாணவர்கள் பெயர்களை பதிவு செய்யவும், கலைத் திருவிழா புகைப்படங்களை சேகரித்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News August 29, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், முழுவதும் 15 துறைகள் சார்ந்த பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று கல்வராயன்மலை சேராப்பட்டு, சின்னசேலம் ஊராட்சி காளசமுத்திரம், கள்ளக்குறிச்சி ஊராட்சி தென்தரசலூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

error: Content is protected !!