Kallakurichi

News August 22, 2024

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து இன்று சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியில், சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே நீண்ட நாட்களாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் புரோக்கர் உட்பட 2 பெண்கள் கைது செய்து சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 22, 2024

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக பல்வேறு விதமான ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News August 22, 2024

5 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய்

image

வடலூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 5 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்து சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு, குழந்தையை கணவர் கடத்தியதாக நாடகமாடிய தியாகதுருகம் அருகே உள்ள சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை வடலூர் காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News August 22, 2024

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு

image

சிறுவங்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நேருவிடம் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

News August 22, 2024

கல்வராயன் மலை தொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவு

image

கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்வராயன் மலைப்பகுதியில் மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News August 22, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து; ஒருவர் மரணம் 

image

மடப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. டிரைவரான இவர், டிராக்டர் டிப்பரில் விறகுகளை ஏற்றிக் கொண்டு மடப்பட்டு கிராமத்தில் இருந்து கெடிலம் நோக்கி சென்றார். நேற்று செரத்தனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ் டிராக்டர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News August 22, 2024

கள்ளக்குறிச்சி அருகே நாளை மின்தடை 

image

நாகலூர் துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நீலமங்கலம், நிறைமதி, முடியனுார் , விருகாவூர், சித்தலுார் , குடியநல்லுார் , வேங்கைவாடி , அசகளத்துார் , பெருவங்கூர், நாகலுார் , கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி,குருர்,மருர்,சாத்தனூர், தண்டலை உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News August 21, 2024

கேரளா வயநாட்டிற்கு நிவாரண நிதி

image

சின்னசேலத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் இளையபெருமாள் அவர்கள் கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார். இதில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 21, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – ஆட்சியர்

image

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மதியனூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பெரியகுறுக்கை கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோமாளூர் மற்றும் திருப்பாலப்பந்தல் கிராமத்திலும், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசம்பட்டு கிராமத்திலும் ஊரகபகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News August 21, 2024

2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று ஆய்வு

image

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தண்டமருதூர் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு, சுடுகாடு மேம்பாடு பணிகள் குறித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!