India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஏழை எளிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஜவுளித்துறை பிரிவுகளில் திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாளை காலை 10 மணி அளவில் கடுமையாக கை கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுய தேவைக்கு உதவியாளர் ஒருவரை வைத்துக்கொள்ள மாதாந்திர உதவித்தொகையுடன் உயர் உதவித்தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி இன்று அறிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் சந்தப்பேட்டை அருகே ராஜேஸ்வரி கார்டன் கனகனந்தல் சாலையில் பொது மக்களின் பயன்பாட்டில் இருக்கும் நகராட்சிக்கு சொந்தமான வழித்தடத்தை மறைத்து மர்மநபர் ஒருவர் வேலி அமைத்துள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிநடத்த பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. நகராட்சிக்கு சொந்தமான வழித்தடத்தை மறைத்து வேலி அமைத்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கப்படவுள்ளது. தகுதி உடையவர்கள் www.sdat.tn.gov.in மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் தேசிய அளவில் மாநில அளவில் விளையாட்டில் சிறந்த வீரர்களாக விளங்கியவர்கள் தற்போது நலிவடைந்து உள்ளவர்கள் தமிழக அரசின் உதவித்தொகை 6000 ரூபாய்க்கு விண்ணப்பிக்கலாம் அவர்கள் www.sdat.tn.gov.in மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் வெளிமுகமை முறையில் ஒரு சமுதாய அமைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்திற்கு நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (02.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 491 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பதினாறு மனுக்களும் என மொத்தமாக 507 மனுக்கள் பெறப்பட்டதாகவும், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி வரை முன்பதிவு செய்ய முடியும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் தங்களின் பிரச்சனைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டமானது இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும், இதில், மக்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.