Kallakurichi

News September 5, 2024

கார் பனை மரத்தில் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த அற்புதவள்ளி தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் இன்று கச்சிராயபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நமச்சிவாயபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்து கார் பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அற்புதவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 5, 2024

கள்ளக்குறிச்சி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து விற்பனையாளர் ரேஷன் அரிசி வியாபாரியிடம் மூட்டை மூட்டையாக ஆட்டோ மூலமாக கடத்திய ஏற்றி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இன்று விற்பனையாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு 300 கிலோ அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News September 5, 2024

45 துணை பி.டி.ஓக்கள் பணியிடை மாற்றம் ஆட்சியர் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 45 துணை பி.டி.ஓ.,க்கள் நேற்று பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கல்வராயன்மலையில் பணிபுரிந்த ஷபி கள்ளக்குறிச்சிக்கும், தியாகதுருகம் தினகர்பாபு ரிஷிவந்தியத்திற்கும், திருக்கோவிலூர் செல்வி திருநாவலூருக்கும், தியாகதுருகம் ஜெயசுதா கள்ளக்குறிச்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 5, 2024

கல்வராயன் மலைக்கு வரும் உதயநிதி?

image

கல்வராயன் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. இந்த விசாரணையில், முக்கிய அமைச்சர்கள் கல்வராயன் மலைக்குச் சென்று ஆய்வு செய்து மலைவாழ் மக்களின் நிலைமை அறிந்து வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நாளை கல்வராயன் மலைக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் வருகை தந்து பல கிராமங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

News September 4, 2024

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொன்பரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராணி. இவர் இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு தனது காட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் வெளிப்பக்க கதவு மற்றும் உள்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 3/4 பவுன் தங்க நகை மற்றும் ஐயாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 4, 2024

இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (04.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2024

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென் கீரனூர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News September 4, 2024

கள்ளக்குறிச்சி அருகே ரேஷன் கடை விற்பனையாளர் பணி நீக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து விற்பனையாளர் ரேஷன் அரிசி வியாபாரியிடம் மூட்டை மூட்டையாக ஆட்டோ மூலமாக ஏற்றி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்  உத்தரவின்படி துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டு விற்பனையாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு.

News September 4, 2024

கள்ளக்குறிச்சி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு விருது 

image

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு ஆலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் செல்வகுமார், ஆரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நிர்மலா மேரி, கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் சூரியக்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கர் உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர்.

News September 4, 2024

கள்ளக்குறிச்சி அருகே பாஜக நிர்வாகி மீது வழக்கு 

image

சின்னசேலம் அடுத்த கருந்தலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. பா.ஜக நிர்வாகி கருந்தலாக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் எவ்வித அரசு அனுமதியின்றி பா.ஜ கொடி கம்பம் அமைத்துள்ளார். இது குறித்து அறிந்த வி.ஏ.ஓ., ரங்கசாமி கீழ்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பா.ஜ., நிர்வாகி செல்வராசு மீது போலீசார் நேற்று (செப் 3) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!