Kallakurichi

News August 28, 2024

கள்ளக்குறிச்சி அருகே இரண்டரை வயது சிறுவன் மரணம்

image

கள்ளக்குறிச்சி அந்தியூர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன்.மனைவி சூரியகலா. இவர்களுக்கு கோபி என்ற இரண்டரை வயது மகன் உள்ளார். இன்று வீட்டிற்கு வெளியே விளையாட சென்ற சிறுவன் கோபி வீட்டில் அருகே உள்ள குடிநீர் தொட்டியின் உள்ளே விழுந்துள்ளார். இதனால் கோபிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 28, 2024

கள்ளக்குறிச்சியில் புதிய மீன் மார்க்கெட்

image

கள்ளக்குறிச்சியில் மீன் மார்க்கெட்டிற்கு என்று தனி இடம் கிடையாது. இதனால் மந்தைவெளி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பின்புறத்தில் தனியார் வாடகை கட்டடத்தில் கடைகள் மீன் மார்க்கெட்டாக இயங்கி வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வளாகத்தில், மீன்கள் விற்பனைக்காக ₹ 15 லட்சம் மதிப்பில் 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

கள்ளக்குறிச்சி அருகே நாளை மின்தடை 

image

திருநாவலுார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருநாவலுார், செம்மணந்தல் , ஆவலம் , குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியாப்பேட்டை, மேட்டாத்துார், சிறுளாபட்டு, பெரியபட்டு, தேவியானந்தல், மேட்டாத்துார், கிழக்குமருதுார், காமாட்சிப்பேட்டை, திடீர்குப்பம், குடுமியான்குப்பம் பகுதிகளில் மாதாந்திர பணிக்காக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது கூரை வீட்டினை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து இளங்கோ மீது விழுந்தது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 28, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றிரவு மழை பெய்தது. குறிப்பாக, சின்ன சேலம், தோட்டப்பாடி, வேப்பநத்தம், தலைவாசல், தியாகனுர், நமச்சிவாயபுரம், சிறுவத்தூர், தொட்டபடி, ஏலவடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் குடை எடுத்து செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News August 28, 2024

இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வடகீரனூர் கிராமத்திலும், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் அம்மகளத்தூர் கிராமத்திலும், திருநாவலூர் ஊராட்சி
ஒன்றியத்தில் செங்குறிச்சி கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில்
கிளியூர் கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கூவனூர் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடைபெறவுள்ளதாக ஆட்சியர் நேற்று அறிவித்தார்.

News August 27, 2024

இரவு ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (27.08.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

News August 27, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு 

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாங்குளம் நீர்நிலை மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் செங்கோடவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனுதாரர் அளித்த மனுவை 12 வாரங்களில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News August 27, 2024

கள்ளக்குறிச்சியில் தொழிற்கல்வி; ஆட்சியர் அறிவிப்பு 

image

உளுந்தூர்பேட்டையில் உலக தரத்தில் அமைய பெற்று வரும் காலனி தொழிற்சாலையில் பணிபுரிவதற்கான காலணிகள் சார்ந்த மத்திய காலனி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கை விண்ணப்பங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

News August 27, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வெணாமி இறால் வளர்க்கும் பண்ணைகளை பதிவு செய்தல் வேண்டும் என்றும், இறால் வளர்க்கும் பண்ணை உரிமையாளர்கள் தங்களது பண்ணைகளை பதிவு செய்திட விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!