Kallakurichi

News September 7, 2024

தம்பியை அரிவாளால் வெட்டிய 2 அண்ணன்கள் கைது

image

கரியாலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பண்ணியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், குமார், இளையாப்பிள்ளை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் அண்ணன் தம்பிகள். பாலகிருஷ்ணனை அவருடை சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து நேற்று இரவு தலையில் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதையடுத்து கரியலூர் போலீசார் இன்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

News September 7, 2024

திருக்கோவிலூர் உதவி மாவட்ட ஆட்சியர் நியமனம்

image

தமிழகத்தில் 10 ஐஏஏஸ் அதிகாரிகளை துணை மற்றும் உதவி ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் உதவி மாவட்ட ஆட்சியராக ஆனந்த் குமார் சிங்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருக்கோவிலூர் கோட்டத்திற்குட்பட்ட நிர்வாக பணிகளை இனி இவர் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 7, 2024

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் செப்டம்பர் 9 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாக்டர்.ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருக்கோவிலூர் கோட்டத்தில் வரும் செப்டம்பர் 12-ம் தேதியன்று அரசு கலைக்கல்லூரியிலும் செப்டம்பர் 23-ம் தேதி ஜவகர்லால் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் உயர்கல்வி வழிகாட்டுதல், ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News September 7, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

image

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அரசு துறையின் வாயிலாக வழங்கப்படும் நலத்திட்டங்களை பெறுவதற்கு வலை பயன்பாடானது துவங்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரியத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, OTP பெற தொலைபேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News September 7, 2024

கல்வராயன் மலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

image

கல்வராயன் மலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரியாலூரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 1,082 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 15,880 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் , எம்.பி. மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

News September 7, 2024

வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருடிய நபர் கைது

image

வாணியந்தலை சேர்ந்த ராதா என்பவர் நேற்று திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்ற நிலையில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர் 4 பவுன் நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் அகரகோட்டாலத்தை சேர்ந்த அஜித்குமார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.

News September 6, 2024

சாலை விபத்தில் வாலிபர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தொட்டி கிராமத்தில் இருசக்கர வாகனம் மற்றும் டாட்டா ஏசி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 17 வயது பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடன் சென்ற வெங்கட சுபாஷ் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 6, 2024

விஷ சாராய மரண வழக்கு ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது?

image

கள்ளக்குறிச்சியில் தவறு நடந்ததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் உள்ள நிலையில் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது என அதிமுக நீதிமன்றத்தில் வாதிட்டது. தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்ட வெறும் புகாரின் அடிப்படையில் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது எனவும் அதிமுக சார்பில் வாதிடப்பட்டது. வாதங்கள் நிறைவடையாததை அடுத்து விசாரணை செப்.10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

News September 6, 2024

உளுந்தூர்பேட்டையில் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் வரும் செப்.8ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நேற்று இரவு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உளுந்தூர்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News September 6, 2024

20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் பகுதியில் உள்ள கோடை விழா கலையரங்கத்தில் நாளை செப்டம்பர் 6ஆம் தேதி அன்று நடைபெறும் நிகழ்ச்சிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இதில் ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!