India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேசவிரோதி என்று விமர்சனம் செய்த பாஜக பொறுப்பு குழு தலைவர் ராஜாவை கண்டித்து இன்று கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 4-வது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை தொடர்ந்து 27 நாட்கள் நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளித்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் ஆய்வு, அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு, அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வரும் 18ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (16.9.2024) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை உடன் ஆலோசனைகள் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் முன்னேற்பாடுகள் குறித்த பாதுகாப்பு கவசங்கள் குறித்தும் தீயணைப்புத் துறையினர் செயல்முறை காண்பித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 234 மனுக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 12 என மொத்தமாக 246 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட விசிக சார்பில் நாளை தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலையிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக சென்று மந்தைவெளியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக கள்ளக்குறிச்சி விசிக தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் பெரும் வளாகத் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள் என்று கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (15-09-2024) இரவு 7 மணி வரை லேசானது மிதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
Sorry, no posts matched your criteria.