Kallakurichi

News September 24, 2024

முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் தொடங்க ஒரு கோடி வங்கி கடன்

image

முதல்வரின் காக்கும் கரங்களின் புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும் என்ன மாவட்ட கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்

News September 24, 2024

வரும் ஐந்தாம் தேதி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

image

கலை பண்பாட்டு துறை தஞ்சாவூர் மண்டலம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகியவை எதிர்வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி காலை 9 மணி அளவில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

News September 23, 2024

அரசு பள்ளி ஆசிரியருக்கு பசுமை முதன்மையாளர் விருது

image

கள்ளக்குறிச்சி அரசு பள்ளி விளையாட்டு பிரிவு ஆசிரியர் சாமிதுரை, மரக்கன்று நடுதல் பனை விதைகள் விதைத்தல் போன்ற சமூக ஆர்வப் பணிகளில் துவரம் காட்டி வரும் நிலையில் பசுமையான வளங்களை உருவாக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சொந்த முயற்சியில் மரகன்றுகள் நட்டு வருகிறார். இதையடுத்து, அவருக்கு பசுமை தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருதை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.

News September 23, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 23.9.2024 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News September 23, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 485 மனுக்கள் குவிந்தது

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுநலன் சார்ந்த 446 மனுக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அளித்த 36 மனுக்கள் என மொத்தமாக 485 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 23, 2024

பசுமை சாதனையாளர் விருது வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செப்டம்பர் 23ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பசுமை சாதனையாளர் 2023க்கான விருது மற்றும் காசோலைணை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பசுமை சாதனையாளர் விருது பெற்ற சாமிதுரை மற்றும் அய்யனார் ஆகியோருக்கு வழங்கினார்.

News September 23, 2024

விஷச்சாராய வழக்கில் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

image

கள்ளக்குறிச்சி, விஷச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சடையன், வேலு, கெளதம் ஆகிய 3 பேரின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பான சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் முழுவீச்சில் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 23, 2024

சார்பதிவாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(35). தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை, போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன்படி, சார்பதிவாளர் மணிராஜ், ஆவண எழுத்தர்கள் உள்ளிட்ட 10 பேர் மீது 6 பிரிவுகளில் நேற்று (செப்.22) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News September 22, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (22.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!