Kallakurichi

News October 7, 2024

கள்ளக்குறிச்சி மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக மூன்று நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 9 ஒன்றியங்கள் டெங்கு ஒழிப்பு பணியில் சுமார் 300 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறை துறையினர் அறிவிப்பு.

News October 7, 2024

போராட்டங்கள் நடத்துவது தவிர்க்க வேண்டும் – கலெக்டர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நகராட்சிகளுடன் சில ஊராட்சிகள் இணைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர்கள் சாலை மறியல் போராட்டம் என நடத்தி வருவது தெரிகிறது. எதுவாக இருந்தாலும் பொதுமக்களின் கருத்து கேட்ட பிறகுதான் ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் என தெரிவித்தார்.

News October 6, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (06.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 6, 2024

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

உளுந்தூர்பேட்டை அருகே மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜகுமாரி. இவர் நேற்று புதிதாக கட்டி வரும் வீட்டின் பகுதியில் மின் வயரில் தெரியாமல் கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 6, 2024

கள்ளக்குறிச்சியில் 48 வாகனங்கள் பறிமுதல்

image

கள்ளக்குறிச்சி பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஓட்டுனர் உரிமம், ஆர்சி புத்தகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் என போக்குவரத்து விதிகளை மீறியதாக 48 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர்.

News October 6, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, குறிப்பாக கஞ்சா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 6, 2024

உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு கடை இருந்தால் நடவடிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க தற்காலிக உரிமை தேவைப்படுபவர்கள் 19.10.2024 இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி உரிமை இல்லாமல் பட்டாசு கடை வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News October 6, 2024

கம்பீரமாக காட்சியளித்த பெருமாள்

image

சின்னசேலம் அருகே தகரை காப்புக்காடு வனப்பகுதியில் அடி பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை என்பதனால் அடி பெருமாள் கோவிலில் உள்ள அடி பெருமாள் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பீரமாக நின்றபடி காட்சியளித்தார். இதை சின்னசேலம் கச்சிராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

News October 5, 2024

திருக்கோவிலூர் டி.எஸ்.பி பெற்றோர்களுக்கு வேண்டுகோள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்கோட்ட பகுதிகளில் உள்ள கிராமமக்கள் தற்போது மழை காலம் ஆரம்பித்து உள்ளதால் தங்களுடைய குழந்தைகளை நீர்நிலைகளின் அருகில் விளையாடவோ, குளிக்கவோ செல்லாதவாறு, கண்காணித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருக்கோவிலூர் காவல் துணைக் காண்பிப்பார் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 5, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி

image

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் கோவையைச் சேர்ந்த ரகுராமன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ரகுராமன் உங்கள் மகளுக்கும், மருமகனுக்கும் இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி ரூ.15 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்து புண்ணியமூர்த்தி போலீசாரில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!