India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் உள்ள ஏழை, எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன சலவை தொழில் செய்யும் தொழிலாளர்களின் நலனுக்காக எல்.பி.ஜி., எனும் திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக விண்ணப்பங்களை பெற்று பயனடையும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 103 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1375 பெண்களும், 2417 ஆண்களும் கலந்து கொண்டனர். நேர்முகத் தேர்வில் 241 பெண்களும், 5 மாற்றுத் திறனாளிகளும், 429 ஆண்களும் வெற்றி பெற்றனர். மொத்தமாக 675 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடைபெறும் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான வகுப்புகள் அக்.14ஆம் தேதி தொடங்கும். மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவொளி அவர்களை 8110829557, 8668107552 மற்றும் 8668101638 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி கிருஷ்ணன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிஷிவந்தியம் தொகுதி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று செப்டம்பர் 28 காலை10 மணிக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பத்தாயிரத்துக்கு மேற்பட்ட படித்த இளைஞர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர்.இன்று படித்த சான்றிதழுடன் காலை 10 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல ரிஷிவந்தியம் எம்எல்ஏ அறிவுறுத்தல்.
மணலூர்பேட்டை அடுத்த ஆதிதிருவரங்கம் கோயிலுக்கு மாம்பழப்பட்டு கிராமத்தில் இருந்து இன்று நடை பயணமாக வந்த பக்தர்கள் பிறகு ஆட்டோவில் செல்லும் போது சொரையப்பட்டு அருகே புளிய மரத்தில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாம்பழப்பட்டு சேர்ந்த பழனி என்பவர் பலியானார். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல மாவட்ட நகர ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் குமரகுரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்பாகவும் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 27.9.2024 ) இன்று 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியா மட்டும் நோக்கத்தோடு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நூற்றுக்கு மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளவும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.