Kallakurichi

News October 2, 2024

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் வயது முதிர்ந்த தமிழர்கள் அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதாவது 1.1.2024 அன்று தேதியில் 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் www.tamilvalarchithurai.tn.gov.in ஐடியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

News October 1, 2024

கள்ளச்சாராய மரண வழக்கு – 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

image

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சடையன், வேலு, கெளதம் ஜெயின் உள்ளிட்டோர் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தனர். 3 பேரின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News October 1, 2024

கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது ஒன்றியங்களில் அமைந்துள்ள 412 ஊராட்சிகளிலும் நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

News October 1, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 1.10.2024 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News October 1, 2024

அரசு அங்கீகார அட்டைகளை ஒப்படைக்க முடிவு

image

புதுப்பட்டு அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அத்தியாவசிய தேவைகளை செய்து தராவிட்டால் ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News October 1, 2024

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய மாவட்ட செயலாளர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர் மற்றும் தேவேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 30, 2024

மாவட்ட அளவிலான கண்காணிப்பு பணி குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வதை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு பணி குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.

News September 30, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (30.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 30, 2024

உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் பேட்டி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நாளை மறுதினம் நடைபெற உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

News September 30, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காந்திஜெயந்தி முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும், உத்தரவை மீறி செயல்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!